மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அடுத்த மூன்று தினங்களில் 39 லட்சம் தடுப்பூசி வழங்கப்படும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், மக்கள் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி தெரிவிக்கப்பட்ட புதிய தடுப்பு சட்டத்தின்படி மத்திய அரசே மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தடுப்பூசியை கொள்முதல் செய்து வழங்கி வருகிறது.
இதுவரை 29, 68,27,450 கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. அதில், 27,76,26,985 டோஸ்கள் தற்போது வரை பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், அடுத்த மூன்று நாட்கள் கூடுதலாக 39 லட்சத்து 7 ஆயிரத்து 310 தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…
மும்பை : ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை தனுஸ்ரீ தத்தா, திரைத்துறையில் பாலியல் அத்துமீறல் குறித்த ‘Me…