கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட 37 வயது பெண் – 6 பேர் கைது!

Published by
Rebekal

குஜராத் மாநிலத்தில் 37 வயதுடைய பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குஜராத் மாநிலத்திலுள்ள வதோதரா மாவட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 37 வயதுடைய பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். விவசாயத் தொழிலாளியாக வேலை செய்து வரும் இந்த பெண் வயலுக்கு சென்ற பொழுது குற்றம் சாட்டப்பட்ட நபர் முதலில் அவருடன் பேசத் தொடங்கியுள்ளார். அதன் பின்பு சிலர் அவருடன் இணைந்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர். சம்பவம் குறித்து தகவலறிந்ததும் வதோதரா மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

மேலும் குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்காக மோப்ப நாயையும் கொண்டு சென்றுள்ளனர். மோப்பநாய் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலின் வாசனையை வைத்து 700 மீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் குற்றவாளியை காட்டிக் கொடுத்துள்ளது. இந்த குற்றவாளி உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். இவருடன் சேர்ந்து 5 பேர் இந்த குற்றத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து இவர்களிடம் நடத்திய விசாரணையில் தாங்கள் கூட்டு பலாத்காரம் செய்ததை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்த பொழுது அந்தப் பெண் உதவிக்காக சத்தமிட்டதாகவும் அதனால் அவளது துப்பட்டாவை வாயில் வைத்து அடைத்து, அதன் பின் குற்றத்தை மறைப்பதற்காக அவளது துப்பட்டாவை வைத்து அவளது கழுத்தை நெரித்து கொன்றதாகவும் கூறியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரில் ஐந்து பேர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் ஜார்கண்டை சேர்ந்தவர் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் 6 பேர் மீதும் ஐபிசி பிரிவு 302 மற்றும் 376 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

6 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

7 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

8 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

9 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

10 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

11 hours ago