lightning strikes [image - AI]
உத்தரப் பிரதேசம் : மாநிலத்தில் வெவ்வேருபகுதிகளில் மின்னல் தாக்கிய சம்பவத்தில் 38 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உ.பி.யின் முக்கிய மாவட்டங்களான பிரதாப்கரில் 11 பேர் உயிரிழந்தனர் அதைத் தொடர்ந்து சுல்தான்பூரில் 7 பேர், சந்தௌலியில் 6 பேர், மெயின்புரியில் 5 பேர், பிரயாக்ராஜில் 4 பேர், அவுரியா, தியோரியா, ஹத்ராஸ், வாரணாசி மற்றும் சித்தார்த்நகரில் ஆகிய மாவட்டங்களில் இருந்து தலா ஒருவர் வீதம் மொத்தம் 38 பேர் பலியாகினர்
இதற்கிடையில், கிழக்கு உத்தரபிரதேசத்தின் சந்தௌலியில், பலர் மின்னல் தாக்கி காயமடைந்து தற்போது மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த புதன் கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.
சுல்தான்பூரில் உயிரிழந்த ஏழு பேரில், மூன்று குழந்தைகள். நெல் நடவு செய்யும் போது அல்லது மாம்பழம் பறிக்க அல்லது தண்ணீர் எடுக்கச் சென்ற போது மின்னல் தாக்கி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. ஒரு பெண் மரத்தடியில் தஞ்சமடைந்திருந்த போது, மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனிடையே, உத்தரப் பிரதேசம் மற்றும் அதன் அருகிலுள்ள யூனியன் பிரதேசங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…