சத்தீஸ்கர் மருத்துவமனையில் தீ விபத்தினால் இறந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் நிவாரணம்…!

Published by
Edison
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்,திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கொரோனா நோயாளிகள் 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார்  மருத்துவமனையில் 30-க்கும்அதிகமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.அதிலும்,கொரோனா வைரஸினால் அதிக பாதிப்பிற்கு உள்ளான 9 பேர் தீவிர சிகிச்சை (ஐசியூ) பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில்,நேற்று மாலை மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில்  திடீரென மின்கசிவு ஏற்பட்டதனால், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.இதனால், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கொரோனா நோயாளிகள் பலர் அறைக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.மேலும், தீயானது மருத்துவமனை முழுவதும் பரவியது.இந்த தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
அதில், 29 கொரோனா நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.ஆனால்
தீவிர சிகிச்சைபிரிவில் சிகிச்சை பெற்று வந்த 5 கொரோனா நோயாளிகள் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.இதனையடுத்து, நடந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து,சத்தீஸ்கர் மாநில அரசு உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை அறிவித்துள்ளது.
Published by
Edison

Recent Posts

நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

33 minutes ago

கமேனியை எளிதாக கொலை செய்ய முடியும்! பரபரப்பை கிளப்பிவிட்ட டொனால்ட் ட்ரம்ப்!

வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…

1 hour ago

ஏர் இந்தியா விமான விபத்து : 700 கிராம் தங்கம், ரூ. 80,000 பணம் மீட்பு!

அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…

2 hours ago

தயவு செஞ்சி வதந்திகளை பரப்பாதீங்க! காந்தாரா-2 படக்குழு வேதனை!

கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…

2 hours ago

எப்பவும் இந்த கேள்வியை கேட்காதீங்க! கூட்டணி பற்றி கேட்டதால் டென்ஷனான பிரேமலதா!

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி…

3 hours ago

பதற்றத்தின் உச்சியில் போர்…”ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்க கூடாது” ஜி7 நாடுகள் முடிவு!

கனடா :  கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான்…

3 hours ago