[Image source : REUTERS]
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக 4 அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பஹானகா ரயில் நிலைய பகுதியில் சென்னை – கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் மோதிக்கொண்ட கோர விபத்தில் இதுவரை 277 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த விபத்து குறித்து ஒடிசா அரசு தெரிவிக்கையில், விபத்தில் சிக்கியதில் 900 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர் என்றும், 260 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இன்னும் 150 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படாமல் இருக்கிறது என்றும், அதனால் ரயிலில் பயணித்தோர் பற்றி உறவினர்கள் யாரும் எங்கும் அலைய வேண்டாம் என்றும், பாலசோர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் அனைத்து விவரங்களும் இருக்கிறது என்று அரசு தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து இந்த விபத்து தொடர்பாக, பஹானகா ரயில் நிலையத்தில் 4 ரயில்வே அதிகாரிகள் உட்பட ரயில்வே ஊழியர்களிடமும், அப்போது பணியில் இருந்த உதவி ஸ்டேஷன் மாஸ்டரிடமும் விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…