Categories: இந்தியா

ஒடிசா ரயில் விபத்து.! பணியில் இருந்த 4 அதிகாரிகளிடம் விசாரணை.!

Published by
மணிகண்டன்

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக 4 அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. 

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பஹானகா ரயில் நிலைய பகுதியில் சென்னை – கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் மோதிக்கொண்ட கோர விபத்தில் இதுவரை 277 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த விபத்து குறித்து ஒடிசா அரசு தெரிவிக்கையில், விபத்தில் சிக்கியதில் 900 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர் என்றும், 260 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இன்னும் 150 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படாமல் இருக்கிறது என்றும், அதனால் ரயிலில் பயணித்தோர் பற்றி உறவினர்கள் யாரும் எங்கும் அலைய வேண்டாம் என்றும், பாலசோர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் அனைத்து விவரங்களும் இருக்கிறது என்று அரசு தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து இந்த விபத்து தொடர்பாக, பஹானகா  ரயில் நிலையத்தில் 4 ரயில்வே அதிகாரிகள் உட்பட ரயில்வே ஊழியர்களிடமும், அப்போது பணியில் இருந்த உதவி ஸ்டேஷன் மாஸ்டரிடமும் விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

22 minutes ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

1 hour ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

1 hour ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

2 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

2 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

3 hours ago