[Image source : REUTERS]
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக 4 அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பஹானகா ரயில் நிலைய பகுதியில் சென்னை – கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் மோதிக்கொண்ட கோர விபத்தில் இதுவரை 277 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த விபத்து குறித்து ஒடிசா அரசு தெரிவிக்கையில், விபத்தில் சிக்கியதில் 900 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர் என்றும், 260 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இன்னும் 150 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படாமல் இருக்கிறது என்றும், அதனால் ரயிலில் பயணித்தோர் பற்றி உறவினர்கள் யாரும் எங்கும் அலைய வேண்டாம் என்றும், பாலசோர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் அனைத்து விவரங்களும் இருக்கிறது என்று அரசு தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து இந்த விபத்து தொடர்பாக, பஹானகா ரயில் நிலையத்தில் 4 ரயில்வே அதிகாரிகள் உட்பட ரயில்வே ஊழியர்களிடமும், அப்போது பணியில் இருந்த உதவி ஸ்டேஷன் மாஸ்டரிடமும் விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…