நிலச்சரிவில் வாகனங்கள் நசுங்கி 4 பேர் பரிதாபமாக பலி.!

Published by
கெளதம்

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில், பெரிய பாறைகள் உருண்டு விழுந்து வாகனங்கள் மீது விழுந்து நொறுக்கியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர், 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கங்கோத்ரியில் இருந்து உத்தரகாசிக்கு காரில் பயணித்த யாத்ரீகர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், மழைக்காலங்களில் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு யாத்திரிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கனமழை காரணமாக பந்தர்கோட் அருகே கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வட இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், உத்தரகாண்ட் மாநிலத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கனமழை எச்சரிக்கையால், டேராடூன், டெஹ்ரி, சாமோலி, பவுரி, பாகேஷ்வர், நைனிடால், அல்மோரா மற்றும் ருத்ரபிரயாக் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

“தனிநபர் வருமானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாம் இடம்” – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்.!

சென்னை : தமிழ்நாடு தனிநபர் வருமானத்தில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் உள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இது…

5 minutes ago

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியீடு.! சர்ப்ரைஸ் கொடுத்த ‘கருப்பு’ படக்குழு!

சென்னை : நடிகர் சூர்யா பிறந்தநாளை ஒட்டி சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ‘கருப்பு’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. சூர்யாவின்…

39 minutes ago

இங்கிலாந்து vs இந்தியா 4வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்.!

மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 23, 2025) மான்செஸ்டரில்…

59 minutes ago

தந்தை முகமது நபி வீசிய பந்து.. சிக்சருக்கு பறக்கவிட்ட மகன்! வைரலாகும் வீடியோ!

காபூல் : ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் நடைபெற்ற ஷ்பகீஸா கிரிக்கெட் லீக் (Shpageeza Cricket League) டி20 போட்டியில் ஒரு…

11 hours ago

அப்ரூவராக மாறும் ஆய்வாளர் ஸ்ரீதர்! சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் புதிய திருப்பம்!

சென்னை : 2025 ஜூலை 22 அன்று, சாத்தான்குளம் கொலை வழக்கில் ஒரு முக்கியமான திருப்பமாக, முதல் குற்றவாளியான முன்னாள்…

12 hours ago

#HBDSuriya : “கருப்பன் வரான் வழி மறிக்காதே”..அப்டேட் கொடுத்த ஆர்ஜே பாலாஜி!

சென்னை : தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன் என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கும் சூர்யா நாளை தன்னுடைய 50-வது பிறந்த…

12 hours ago