ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட புகாரில் 4 பேருக்கு விடுதலை.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • 2013-ம் ஆண்டு ஐ.பி.எல் சூதாட்டத்தில் லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கியவர்களை ஐ.பி.எஸ் அதிகாரி உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என கூறி விடுதலை செய்தது.

ஐபிஎல் போட்டி பார்க்கும் பொது எவ்வளவு சுவாரசியமாக இருந்தாலும் அதிலும் ஊழல் மற்றும் பல்வேறு பெட்டிங் இருக்கிறது என பல தரப்பு மக்களும், ரசிகர்களும் கூறி வருகின்றனர். அந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஹோட்டல் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர்கள் உள்பட 13 பேர் சென்னையில் கைதுசெய்யப்பட்டனர். இந்த கைது சம்பவத்துக்கு முன்னதாகவே கிரிக்கெட் சூதாட்டம் நடப்பதை தமிழக ‘க்யூ’ பிரிவு போலீஸார் கண்டுபிடித்து 21 பேரிடம் விசாரணையும் நடத்தினர். சென்னை க்யூ பிரிவு எஸ்.பி.யாக இருந்த சம்பத்குமார், போலி பாஸ்போர்ட் வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்தியபோது, வடமாநிலத்தைச் சேர்ந்த சிலருக்கு கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பிருப்பதை முதலில் கண்டுபிடித்தார்.

மேலும் அவர்களை விடுவிக்க ஏற்பாடு செய்வதாகக் கூறி பணம் வசூலித்த 3 பேர், பின்னர் அந்த வழக்கை விசாரித்து வந்த கியூ பிரிவு கண்காணிப்பாளர் சம்பத்குமாருக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. பின்னர் இதுகுறித்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையறிந்த பல புரோக்கர்கள், போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க மகேந்தர்சிங் ரங்கா என்பவரை அணுகினர். நகைக்கடை மற்றும் பைனான்ஸ் தொழில் செய்யும் மகேந்தர்சிங் ரங்கா, பல போலீஸ் அதிகாரிகளுக்கு நெருக்கமாக இருந்திருக்கிறார். தன்னை அணுகிய புரோக்கர்களிடம் பல லட்சங்களை வசூல் செய்த மகேந்தர்சிங், அதில் சில லட்சங்களை எஸ்.பி. சம்பத்குமாரிடம் கொடுத்து, சிலரை சூதாட்ட வழக்கில் இருந்து விடுவிக்க முயற்சி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

பின்னர் அதை தொடர்ந்து வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பளித்த லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி எந்த ஆதாரமும் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி ஐபிஎஸ் அதிகாரி அந்த நான்கு பேரை விடுதலை செய்து, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

8 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

9 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

9 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

10 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

12 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

12 hours ago