4 வயது மகன் கொலை வழக்கு.! தாயாரை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்ற போலீசார்.!

Published by
மணிகண்டன்

தனது 4 வயது மகனை கோவாவில் ஒரு தனியார் விடுதியில் கொலை செய்து உடலை வேறு இடத்திற்கு கடத்தி சென்றதாக பெங்களூருவை சேர்ந்த தனியார் ஐடி நிறுவன தலைமை அதிகாரியான சுசானா சேத் என்பவரை கோவா போலீசார் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா எனுமிடத்தில் கர்நாடக போலீசார் உதவியுடன் கடந்த திங்களன்று கைது செய்தனர்.

4 வயது சிறுவன் மரணம் : ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. அதற்கும் மறுத்துவிட்டார்.! டிரைவர் வாக்குமூலம்.!

செய்வ்வாயன்று கோவா அழைத்து வரப்பட்ட சுசானா சேத் தற்போது நீதிமன்ற காவலில் கோவா போலீசார் விசாரணை வளையத்தில் உள்ளார். அவரிடம் காவல்துறையினர் பல்வேறு வகையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அவர் தற்போது வரையில் தனது மகனை தான் கொலை செய்யவில்லை என்று தான் கூறி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தான் தற்கொலைக்கு முயன்றதாகவும்,  தனது மகன் தூக்கத்திலேயே உயிரிழந்துவிட்டான் என்றும் , சூட்கேஸ் எடை அதிகமானது தனக்கு தெரியாது என்றும் சுசானா சேத் போலீசார் விசாரணையில் கூறினார். சிறுவனின் பிரேத பரிசோதனை விவரத்திலும், சுசானா சேத் கைது செய்யப்படுவதற்கு 36 மணிநேரத்திற்கு முன்னரே உயிரிழந்துவிட்டார் என்றும், சிறுவன் கழுத்து நெறிக்கப்பட்டோ, மூச்சு திணறல் ஏற்பட்டோ இறந்துவிட்டான் என்றும்  சிறுவன் உடலில் ரத்த காயங்கள் இல்லை என்றும் மருத்துவ அறிக்கை தெரிவித்தது.

இந்நிலையில், கோவா போலீசார் சுசனா சேத்தை குற்றக்காட்சியை மீண்டும் உருவாக்குவதற்காக அவர் தங்கியிருந்த கோவாவில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றனர். இதுவும் விசாரணையின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது இதன் மூலம், சிறுவனின் கொலைக்கான காரணத்தைக் கண்டறிய முடியும் என காவல்துறையினர் யூகித்தனர்.

ஆனால், சுசானா சேத் தான் தற்கொலைக்கு முயற்சித்த இடம் இது தான் என்று மட்டுமே போலீசாரிடம் காட்டியுள்ளார். தனது மகனை கொன்றதாக அவர் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை என்று கோவா போலீஸார் தெரிவித்தனர். அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், இதுவரை குழந்தை இறந்ததற்கான எந்த வருத்தமும் காட்டவில்லை என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிகின்றன.

Recent Posts

உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்.!

டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…

32 minutes ago

+2 துணை தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி இதுதான் மாணவர்களே..

சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…

33 minutes ago

என்னோட தலையீட்டால் தான் போர் தாக்குதல் நிறுத்தப்பட்டது – மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…

1 hour ago

எடப்பாடி பழனிசாமி வேலையே பொய், பித்தலாட்டத்தை சொல்வதுதான் – முதல்வர் ஸ்டாலின் சாடல்!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

2 hours ago

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

18 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

19 hours ago