ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஹரியானாவில் 5 பேர் உயிரிழப்பு!

Published by
Rebekal

ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஹரியானாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படும் நிலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் நோயாளிகள் நிறைந்து வழிவதால் மருத்துவமனை நிர்வாகம் படுக்கை வசதிகள் மற்றும் ஆக்ஸிஜன் வசதிகள் இல்லாமல் திணறி வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் தற்பொழுது ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக தொடர்ந்து உயிரிழப்பு ஏற்பட்டு கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிரிசா எனும் பகுதியில் உள்ள மருத்துவமனையில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 5 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநரத்தில் இது போன்று வேறு இரு இடங்களிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. குருகிராமில் உள்ள மருத்துவமனையில் 4 நோயாளிகளும், ரேவாரி  மருத்துவமனையில் 4 நோயாளிகளும் உயிரிழந்துள்ளனர். இதுவரை 13 நோயாளிகள் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

14 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

16 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

20 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

21 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

23 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

23 hours ago