10 கி.மீட்டரை வெறும் 62 நிமிடங்களில் ஓடிய 5 மாத கர்ப்பிணி பெண்..!

Published by
murugan

பெங்களூருவில் டி.சி.எஸ் 10 கே மராத்தான் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த  மராத்தான் போட்டி 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. வழக்கமாக மே-ஜூன் மாதங்களில் நடைபெற்றது, இருப்பினும் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக, இது டிசம்பரில் மாதம் நடைபெற்றது.

இந்த மராத்தானில் பங்கேற்க ஏராளமானோர் வந்தனர். இந்த மாரத்தான் போட்டியில் ஒரு அதிசயம் ஓன்று நிகழ்ந்தது. அது என்னெவென்றால் அங்கிதா கவுர் என்ற ஐந்து மாத கர்ப்பிணிப் பெண் ஓருவர் வெறும் 62 நிமிடங்களில் 10  கி.மீ கடந்துள்ளார். அங்கிதா, 2013 முதல் டி.சி.எஸ் வேர்ல்ட் 10 கே-யில் பங்கேற்று வருகிறார். பெர்லின் (மூன்று முறை), பாஸ்டன் மற்றும் நியூயார்க் உள்ளிட்ட ஐந்து முதல் ஆறு சர்வதேச மராத்தான்களிலும் பங்கேற்றுள்ளார்.

இந்த மராத்தானில் ஒவ்வொரு முறையும் பதக்கங்களை வெல்வது வழக்கம் என்று அங்கிதா கூறினார். இருப்பினும் இந்த முறை அது நடக்கவில்லை, மருத்துவரின் ஒப்புதலுக்குப் பிறகுதான் அங்கிதா பந்தயத்தில் பங்கேற்றார். ஓடுவதில் எந்த ஆபத்தும் இல்லை என்று மருத்துவர் தெரிவித்தார் என அங்கிதா கூறினார், மருத்துவரின் ஒப்புதல் இருந்தபோதிலும், அங்கிதாவின் தாயார் ஆரம்பத்தில் இதற்கு அனுமதி கொடுக்கவில்லை. பின்னர், பெற்றோரைத் தவிர, அங்கிதாவின் கணவரும் ஆதரவு கொடுத்தார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக நான் தவறாமல் தினமும் ஓடிக்கொண்டிருக்கிறேன், எனவே இது எனக்கு சுவாசம் போன்றது. இது இயல்பாகவே என்னுள் இருக்கிறது என அங்கிதா கூறினார்.

Published by
murugan

Recent Posts

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

34 minutes ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

3 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

3 hours ago

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

4 hours ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

4 hours ago

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…

6 hours ago