Railway Tracks [File Image]
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள போர்கேடி மேம்பாலத்தில் இருந்து இன்று காலை வேகமாக சென்றுகொண்டிருந்த வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கீழே 50 அடி உயரத்தில் இருந்த ரயில் தண்டவாளத்தில் விழுந்தது. விபத்து காரணமாக காரில் பயணம் செய்த குறைந்தது 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உள்ளூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கார் கட்டுப்பாட்டை இழந்து கீழே ரயில் தண்டவாளத்தில் விழுந்த நிலையில், அந்த சமயம் அப்பகுதியில் ரயில் எதுவும் வரவில்லாத காரணத்தால் பெரிய விபத்துக்கான சம்பவம் தவிர்க்கப்பட்டது.
கட்டுப்பாட்டை இழந்து கார் 50 அடி உயரத்தில் இருந்த ரயில் தண்டவாளத்தில் விழுந்து 5 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…