51 நாட்களுக்கு பிறகு இன்று பயணிகள் ரயில்கள் இயக்கம்

Published by
Dinasuvadu desk

51 நாட்களுக்கு பிறகு இன்று முதல் பயணிகள் ரயில்கள் தொடங்க உள்ளது.

கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் 21 நாள்களுக்கு அதாவது ஏப்ரல் 14 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மீண்டும் மே 03 -ம் தேதி வரை ஊரடங்கு  நீடிக்கப்பட்டது. ஆனால் கொரோனா தாக்கம் குறையாததால் வருகின்ற 17-ம் தேதி வரை ஊரடங்கு   நீடிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் அனைத்து போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பின் ஊரடங்கில் பல  தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது.

இதைத்தொடர்ந்து  பிற மாநிலங்களில் உள்ள தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல கடந்த 1-ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள்  இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மத்திய ரயில்வே அமைச்சகம் நேற்று முன்தினம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், பயணிகள் ரயில் படிப்படியாக தொடங்கப்படும் என அறிவித்தது.

முதற்கட்டமாக மும்பை, பெங்களூரு, சென்னை உட்பட 15 நகரங்களுக்கு இன்று முதல் ரயில் இயக்கப்படும் என்றும்  இந்த ரயிலில் பயணம் செய்வதற்கு முன் முழுமயான பரிசோதனை நடத்தப்பட்டு பின்னர் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த, சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நேற்று மாலை 4 மணிக்கு முன்பதிவு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால்,   ரயில்களுக்கான முன்பதிவு 6 மணிக்கு தொடங்கும் என அறிவிப்பு வெளியிட்டது.

இந்த முன்பதிவை ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் மட்டுமே  செய்யமுடியும் என  ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயங்கவுள்ளன.

Published by
Dinasuvadu desk

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

7 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

7 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

8 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

8 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

10 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

10 hours ago