சீன செயலிகள் மூலம் பயனாளிகள் விவரங்கள் திருடப்படுவதாகத் புகார்கள் தொடர்ந்து எழுந்துவந்த நிலையில், 52 சீன செயலிகளை தடை செய்ய வேண்டுமென புலனாய்வு துறை மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
சீனா மொபைல் செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துக்கொண்டே வந்தது. அதில் குறிப்பாக, “ஜூம்” எனும் விடியோ கால் செயலி. இந்த செயலியில் 50 பேர் வரை விடியோக்கால் செய்யலாம். இதனால் இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் பலர் இந்த செயலியை பயன்படுத்தி, தங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் பேசுவது, அலுவலக கூட்டம், போன்றவற்றுக்காக பயன்படுத்தி வந்தனர்.
இந்த செயலியில் முக்கியமான பல தகவல்கள் திருடப்படுவதாக கடும் குற்றச்சாற்றுகள் எழுந்தது. இதனால் ஜெர்மனி வெளியுறவுத் துறை, தைவான் மற்றும் அமெரிக்க நாடாளுமன்றம் ஆகியவை ஜூம் செயலியை உபயோகிப்பதை முற்றிலுமாக தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து நடந்த ஆய்வில் புலனாய்வு துறை 52 செயலிகளை பட்டியலிட்டது. அந்த செயலிகள் பாதுகாப்பற்றவை எனவும், அந்த செயலிகள் மூலம் மக்கள் பலரின் தகவல்கள் திருடப்படுகிறது. இதில் பெரும்பாலானவை, கேமரா செயலி மற்றும் வைரஸ் கிளீனர் ஆகும். இதனால் அந்த செயலிகளை மக்கள் உபயோகிப்பதை தடுக்கவோ அல்லது முழுமையாக தடை செய்ய புலனாய்வு துறை மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
எந்த 52 செயலிகள்:
ஆகிய 52 செயலிகளுக்கு தடை விதிக்க புலனாய்வு துறை கோரிக்கை வைத்துள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…