54 வயது பெண்ணுக்கும் 22 வயது ஆணுக்கும் உண்டான காதல்.! 6 பேரக் குழந்தைகளுடன் தவிக்கும் கணவர்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • டெல்லி அருகே உள்ள ஆக்ராவில் 54 வயது நிரம்பிய பெண்ணும், 22 வயதான வாலிபரும் காதலில் விழுந்த சம்பவம், 6 பேரக் குழந்தைகளுடன் கணவர் காவல்நிலையத்தில் புகார்.
  • அந்த பெண் பேசுகையில், தன்னுடைய காதலனுடன் சேர்ந்து வாழப்போவதாக முடிவெடுத்து விட்டதாகவும், அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

டெல்லி அருகே உள்ள ஆக்ராவில் வயது முதிர்ந்த ஒருவர் தனது 6 பேரக் குழந்தைகளுடன் அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு சென்று, தனது மனைவியும், 22 வயது நிரம்பிய ஒரு ஆணும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக புகார் அளித்துள்ளார். பின்னர் போலீஸ் விசரணையில், பிரகாஷ் நகரில் வசித்து வரும் அந்த பெண்ணும், அந்த இளைஞரும் இரண்டு வருடங்களாக தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்தப் பெண் பேசுகையில், தன்னுடைய காதலனுடன் சேர்ந்து வாழப்போவதாக முடிவெடுத்து விட்டதாகவும், அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், காதல் எந்த வயதிலும் வரலாம், அதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளார். அவர் காதலரான 22 வயது இளைஞரை விசாரித்த போது, அந்த பெண் தன்னுடைய நம்பிக்கைக்குரிய காதல் என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், இருவர் குடும்பத்தினரும் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, தங்களை சேர்ந்து வாழவிடவில்லை எனில் தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து, போலீஸார் அந்த இளைஞரின் மீது வழக்கு பதிவு செய்தனர். அப்போதும் கூட, அவர் தன்னுடைய 54 வயது காதலியைத் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகக் கூறியுள்ளார். இறுதியாக அவர்கள் இருவரையும் கைவிடுவதாக, இரு குடும்பத்தினரும் முடிவு செய்துள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

27 seconds ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

23 minutes ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

43 minutes ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

1 hour ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

2 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

3 hours ago