“5 ஜி தொழில்நுட்பம் பாதுகாப்பானது” – COAI ஜெனரல் எஸ்.பி.கோச்சார்…!

Published by
Edison
  • 5 ஜி தொழில்நுட்பம் பாதுகாப்பானது என செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கத்தின் (COAI) இயக்குனர் ஜெனரல் எஸ்.பி.கோச்சார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் விரைவில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்,இந்த 5ஜி தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தானது எனவும்,அதற்கு தடை விதிக்கக் கோரியும் பிரபல பாலிவுட் நடிகை ஜூகி சாவ்லா அவர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும், இது குறித்து தெரிவித்த பாலிவுட் நடிகை ஜூகி,

  • “5ஜி தொழில்நுட்பத்தின் கதிரியக்கத்தால் மனிதர்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், பூச்சிகள் என அனைத்துமே பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
  • தற்போது உள்ள கதிரியக்க அளவை விட 10 முதல் 100 மடங்கு அதிகமான கதிர்வீச்சை இந்த 5ஜி தொழில்நுட்பம் வெளியிடுவதால் மனிதர்களுக்கு மீள முடியாத கடுமையான பாதிப்பையும், சுற்றுச்சூழல் அமைப்பு நிரந்தர சேதத்தை உருவாக்கும்” எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
  • இதனையடுத்து,இது தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்ததுடன்,5ஜி சேவைக்கு தடை விதிக்கக் கோரிய பாலிவுட் நடிகை ஜூகி சாவ்லாவிற்கு 20 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில்,இதுகுறித்து,செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கத்தின் இயக்குனர் ஜெனரல் எஸ் பி கோச்சார் கூறுகையில்,

  • “தொலைத் தொடர்புத் துறையில் மின்காந்த கதிர்வீச்சு வரம்பிற்கான நிர்ணயிக்கப்பட்ட இந்தியாவின் தரங்கள் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரங்களை விட மிகவும் கடுமையானவை.
  • அதன்படி,இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட கதிர்வீச்சு உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டவற்றில் பத்தில் ஒரு பங்கு ஆகும்.எனவே ஏற்கனவே எங்கள் அமைப்புகள் இதை கணக்கில் எடுத்துக்கொண்டன.
  • இந்தியாவில்,கதிர்வீச்சு மற்றும் தாக்கம் குறித்த எந்தவொரு கருத்தும் தவறாக உள்ளன.
  • இவை தவறான அச்சங்கள் மற்றும் ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும்போதெல்லாம் இது எப்போதும் நிகழ்கிறது”, என்று கூறினார்.
  • மேலும்,நடிகை ஜூகி சாவ்லாவுக்கு எதிரான நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று,”இந்த தீர்ப்பானது தவறான வதந்திகளைத் தடுத்து நிறுத்துகிறது.
  • இதன்மூலம்,மற்றவர்கள் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுவது குறையும்.
  • அதுமட்டுமல்லாமல்,5G தொழில்நுட்பத்தால்,உடலின் ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்த எந்தவொரு தகவலும் முற்றிலும் தவறாக உள்ளது.ஏனெனில்,5G தொழில்நுட்பம் பாதுகாப்பானது.
  • மேலும் கிடைக்கக்கூடிய அனைத்து ஆதாரங்களும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் பாதுகாப்பானது என்பதை ஆதரிக்கிறது.
  • எனவே,செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் (சிஓஏஐ), 5 ஜி ஒரு “கேம் சேஞ்சர்” என்பதை நிரூபிக்கும்.மேலும்,பொருளாதாரம் மற்றும் சமுதாயத்திற்கான நன்மைகளுக்கு வழிவகுக்கும்” என்றும் வலியுறுத்தினார்.
Published by
Edison

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

6 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

6 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

7 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

8 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

9 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

9 hours ago