பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ள நீல்காந்த் என்ற தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 6 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில் வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பவர்கள் ஒரு பக்கமிருக்க, ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் நோயாளிகள் உயிரிழகின்றனர்.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ள நீல்காந்த் என்ற தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 6 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதில் 5 நோயாளிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகிகளில் ஒருவர் கூறுகையில், இரண்டு நாட்களுக்கு முன்பாக ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தினோம்.
மேலும் நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு குடும்பத்தினரிடம் கூறி விட்டதாக அவர் தெரிவித்தார். நான்கு நாட்களுக்கு பின் அரசு மருத்துவக் கல்லூரியில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டபோது அது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டதாக மாவட்ட நிர்வாகமும் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்தனர் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…