திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஜூன் 8ம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆந்திரா அரசு அனுமதி.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஜூன் 8ம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆந்திரா அரசு அனுமதி வழங்கியுள்ளது. வருகின்ற ஜூன் 8, 9ம் தேதிகளில் தேவஸ்தான ஊழியர்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள், 10, 11ம் தேதிகளில் உள்ளூர் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தினமும் காலை 6.30 மணியிலிருந்து மாலை 5 மணிவரை தரிசனம் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்கள். மேலும் ஒரு மணி நேரம் வி.ஐ.பி. தரிசனமும், அதற்குப்பின் சர்வ தரிசனம் தொடங்கப்பட உள்ளது. 3000 பேருக்கு ஆன்லைன் மூலமாகவும், 3000 பேருக்கு நேரடி தரிசன டிக்கெட் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அனுமதி கிடையாது மேலும் நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் தயவுசெய்து ஏழுமலையான் தரிசனத்திற்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது
கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…
டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…
சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…
சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…
குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…