கணவன் தற்கொலை செய்ததை வீடியோ எடுத்த மனைவி – உயிரிழந்த கணவர்!

Published by
Rebekal

கணவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறியதை பொய் என நினைத்து, அதை வீடியோவாக பதிவு செய்த மனைவி மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேற்கு வங்கத்தில் திருமணமாகிய 4 மாதத்தில் தம்பதிகள் இருவருக்கு இடையேயான முரண்பாடான வாழ்க்கை தற்போது ஒரு உயிரையே மாய்த்துள்ளது. மேற்குவங்கத்தில் வசித்து வரக்கூடிய அமோன் ஷா எனும் 25 வயதுடைய நபர் நேஹா எனும் 21 வயதுடைய பெண்ணை கடந்த டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆகி உள்ள நிலையில் இவர்களுக்கிடயே கருத்து வேறுபாடுகள் மற்றும் கசப்புகள் இருந்து வந்துள்ளது. திருமணத்திற்கு பின்பு டெல்லிக்கு சுற்றுப்பயணம் சென்று இவர்கள் வெளியில் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தாலும், இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து செல்ல நேஹா முடிவெடுத்துள்ளார்.

அமோன் தனது மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பியுள்ளார். ஆனால், நேஹா அண்மையில் விவகாரத்திற்கு கோரியிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து அண்மையில் அமோன் ஷா தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனது மனைவியிடம் கூறி உள்ளார். ஆனால் அவரது மனைவி எவ்வித பதற்றமும் இன்றி, அவர் தற்கொலை செய்து கொள்வதை வீடியோவாக எடுத்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து தற்கொலை செய்து கொண்ட அமோனின் உடலை கைப்பற்றி அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவரது குடும்பத்தினர் வேலூருக்கு மருத்துவம் பார்ப்பதற்காக சென்றுள்ளனர். இதனை அடுத்து அமோனின் சகோதரியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்பொழுது, இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகம் இருந்ததாகவும், தனது சகோதரர் நேஹாவுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டதாகவும், ஆனால் நேஹா அதை மறுத்து வந்ததாகவும் அமோனின் சகோதரி தெரிவித்துள்ளார். மேலும், நேஹா மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளார். இது குறித்து நேஹாவிடம் போலீசார் விசாரித்தபோது, தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனது கணவர் தன்னிடம் கூறினாலும், இது போல பல முறை மிரட்டியுள்ளதால்அவர் தன்னை மிரட்டுவதாக தான் அவர் நினைத்ததாகவும், எனவே தான் அதை வீடியோவாக எடுத்து வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் நேஹாவின் கருத்து சற்று முரண்பாடாக இருப்பதால் தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது கணவர் தற்கொலை செய்துகொண்டதை மனைவி வீடியோவாக எடுத்து, கணவரின் உயிரும் தற்பொழுது பிரிந்துள்ள நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

5 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

5 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

7 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

7 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

9 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

10 hours ago