ProjectTiger [File Image]
உலகில் உள்ள புலிகளில் 70 சதவீதம் இந்தியாவில்தான் காணப்படுகின்றன என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சென்னையில், ஜி 20 சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை அமைச்சர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ப்ராஜெக்ட் லயன் மற்றும் ப்ராஜெக்ட் டால்பின் ஆகியவை தயாராக உள்ளன என்று கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், நமது கிரகத்தில் ஏழு பெரிய பூனைகளை பாதுகாப்பதற்காக இந்தியா சமீபத்தில் சர்வதேச பெரிய பூனை கூட்டணியை தொடங்கியுள்ளது.இது ஒரு முன்னோடி பாதுகாப்பு முயற்சியான புராஜெக்ட் டைகரில் இருந்து நாம் கற்றுக்கொண்டதை அடிப்படையாகக் கொண்டது என்று கூறினார்.
மேலும், புராஜெக்ட் டைகர் திட்டத்தின் விளைவாக, உலகில் உள்ள புலிகளில் 70 சதவீதம் இந்தியாவில்தான் காணப்படுகின்றன. ப்ராஜெக்ட் லயன் மற்றும் ப்ராஜெக்ட் டால்ஃபின் திட்டத்திலும் நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்று கூறினார்.
சர்வதேச பெரிய பூனைகள் கூட்டணி (ஐபிசிஏ) பிரதமர் மோடியால் ‘புலிகளின் 50 ஆண்டு நினைவாக’ இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கர்நாடகாவில் உள்ள மைசூரு பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…