#அதிர்ச்சி: இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 747 மருத்துவர்கள் உயிரிழப்பு.. தமிழகத்தில் அதிகமாம்!

Published by
Surya

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 747 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுபடுத்த தீவிர நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதேசமயத்தில், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கு தங்களின் உயிரை பனையவைத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். அந்தவகையில், இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 747 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தி தொகுப்பில், இந்திய மருத்துவ சங்கத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் கொரோனா வைரஸால் 747 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.எம்.ஏ பொதுச்செயலாளர் டாக்டர் ஜெயேஷ் லெலே தெரிவித்தார். இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 89 மருத்துவர்களும், மேற்கு வங்கத்தில் 80 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவிலே கொரோனா பரவல் அதிகம் உள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் 74 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், ஆந்திராவில் 70 மருத்துவர்களும், உத்தர பிரதேசத்தில் 66 மருத்துவர்களும், கர்நாடகாவில் 68 மருத்துவர்களும், கொரோனா அதிகரித்து வரும் குஜராத்தில் 62 மருத்துவர்கழும், பிகார் மாநிலத்தில் 40 மருத்துவர்களும், டெல்லி மற்றும் மத்திய பிரதேசத்தில் 22 மருத்துவர்களும், அசாம் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் 20 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

Published by
Surya

Recent Posts

இங்கிலாந்துக்கு எதிரா என்னால் 3 போட்டி தான் விளையாட முடியும்! பும்ரா எடுத்த முடிவு!

இங்கிலாந்துக்கு எதிரா என்னால் 3 போட்டி தான் விளையாட முடியும்! பும்ரா எடுத்த முடிவு!

லீட்ஸில் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின் முதல்…

4 minutes ago

இனிமே கனரக வாகனங்களுக்கு இது தான் டைம்! கட்டுப்பாடு விதித்த காவல் ஆணையர்!

சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…

33 minutes ago

ஈரான் கொடுத்த எச்சரிக்கை…நேரடியாக போரில் இறங்குகிறதா அமெரிக்கா?

வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…

1 hour ago

லண்டனில் ஆதரவற்று நிற்கும் குழந்தைகளுக்கு உதவி செய்வோம்! உறுதியளித்த டாடா குழும தலைவர் சந்திரசேகரன்!

மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…

3 hours ago

அடுத்து இந்த 2 இடம் தான் டார்கெட்..உடனே வெளியேறுங்க! அலர்ட் கொடுத்த இஸ்ரேல்!

இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…

4 hours ago

அனைவரும் பிழைத்துவிட வேண்டும் என நினைத்தேன்! விமான விபத்து குறித்து சந்திரசேகரன்!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…

4 hours ago