77வது சுதந்திர தினம்… டெல்லியில் ஏற்பாடுகள் தீவிரம்… என்னென்ன நிகழ்வுகள் நடைபெறும் தெரியுமா.?

Published by
மணிகண்டன்

வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நமது நாட்டில் 77வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மற்றும் அந்தந்த மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. தற்போது பல்வேறு இடங்களில் பாதுகாப்பு வீரர்களின் ஒத்திகை நிகழ்வு நடைபெற்று வருகின்றன.

டெல்லியில், செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி தலைமையேற்று, தேசிய கொடி ஏற்றி வைத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார். அந்தசமயம் ஆயுதப்படை மற்றும் டெல்லி காவல்துறை சார்பில் பிரதமருக்கு மரியாதை செலுத்தப்படும்.

வரும் ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சி நிரல் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி , செங்கோட்டையின் லாகூர் கேட் முன்பு பிரதமர் நரேந்திர மோடி வரும் போது, அவரை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாதுகாப்பு செயலாளர் டாக்டர் அஜய் குமார் ஆகியோர் விழா நடைபெறும் இடத்திற்கு அழைத்து செல்வர்.

சல்யூட்டிங் தளத்திற்கு அழைத்துச் செல்லபட்ட பிரதமர் மோடிக்கு, அங்கு முப்படை வீரர்கள் மற்றும் போலீஸ் காவலர்கள் பிரதமர் மோடிக்கு பொது வணக்கத்தை வழங்குவார்கள். அதன்பிறகு, பிரதமர் மரியாதை நிமித்தமாக பார்வையிடுவார். பிரதமருக்கான மரியாதைக் காவலர் குழுவில் ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் டெல்லி காவல்துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி இருப்பார்.

விழாவைத் தொடர்ந்து தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்படுதல் நிகழ்ச்சி நடைபெறும். அந்த சமயம் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் மூலம் வானில் இருந்து மலர்கள் தூவப்படும். 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க தேசிய கொடிக்கு வீரவணக்கம் செலுத்தப்படும்.

இந்த நிகழ்விற்கு பின்னர் பிரதமர் மோடி உரையாற்றுவார். பிரதமர் உரை முடிந்த உடனேயே தேசிய கீதம் பாடுதல் மற்றும் இறுதியில் மூவர்ண பலூன்கள் வானத்தில் விடப்படும்.

மாலையில், குடியரசு தலைவர் மாளிகையில், இந்திய ஜனாதிபதியால் வரவேற்பு அளிக்கப்படும். வழக்கமான நெறிமுறை அழைப்பாளர்களைத் தவிர பலதரப்பட்ட விருந்தினர்கள் அங்கு இருப்பார்கள். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள், பத்ம விருது பெற்றவர்கள், கல்வித்துறையில் முதலிடம் பெற்றவர்கள், ஆராய்ச்சியாளர்கள், மற்றும் நாடு முழுவதும் உள்ள பலர் அந்த விழாவில் கலந்து கொள்வர்.

செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ரோ கன்னா கலந்துகொள்ள உள்ளார். ரோ கன்னா தலைமையிலான தூதுக்குழுவில் மைக்கேல் வால்ட்ஸும் அடங்குவர். இவர்கள் இருவரும் இந்தியா மற்றும் இந்திய அமெரிக்கர்கள் மீதான இரு கட்சி காங்கிரஸ் காகஸின் இணைத் தலைவர்கள்.

இந்தியா முழுவதிலுமிருந்து 1,800 சிறப்பு விருந்தினர்கள்அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இந்த ஆண்டு புதுதில்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின கொடியேற்று விழாவில் கலந்துகொள்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

34 minutes ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

2 hours ago

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

2 hours ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

3 hours ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

4 hours ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

4 hours ago