மேற்குவங்கத்தில் 8 பேர் தீ வைத்து எரித்து கொலை – 21 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு!

Published by
பாலா கலியமூர்த்தி

மேற்குவங்க பிர்புமில் 8 பேர் எரித்து கொல்லப்பட்டது தொடர்பாக 21 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு.

தீ வைத்து எரித்த சம்பவம்:

கடந்த திங்கள்கிழமை மேற்குவங்க மாநிலத்தில் பிர்பூம் அருகே பஞ்சாயத்து துணைத்தலைவர் வெட்டிக் கொல்லப்பட்டதால் 8 பேர் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டனர். பஞ்சாயத்து துணை தலைவர் கொலைக்கு பழிவாங்க 10 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதில் 2 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் உத்தரவிட்ட நிலையில், அதனடிப்படையில் பஞ்சாயத்து துணை தலைவர் ஒருவர் கைதும் செய்யப்பட்டார்.

சிபிஐ விசாரணை:

இதனைத்தொடர்ந்து, மேற்குவங்க  பிர்பூம் அருகே பஞ்சாயத்து துணைத்தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 8 பேர் தீ வைத்து எரித்துக் கொள்ளப்பட்டது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க ஆணையிட்டிருந்தது. முதற்கட்ட விசாரணை அறிக்கையை ஏப்ரல் 7-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய சிபிஐக்கு கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. பிர்பும் பகுதியில் நடந்த வன்முறை குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்த நிலையில், வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

21 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு:

இந்த நிலையில், மேற்குவங்க பிர்புமில் 8 பேர் எரித்து கொல்லப்பட்டது தொடர்பாக 21 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. பிர்பூம் கலவரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 21 பேர் மீது எஃப்ஐஆரில் பிரிவு 147, 148, 149 மற்றும் பிற பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

10 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

45 minutes ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

1 hour ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

2 hours ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

17 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

18 hours ago