தலைநகர் டெல்லியில், 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 12 வயது சிறுவன் மற்றும் 11 வயது சிறுவன் இருவரையும் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இன்றைய சூழலில் கேள்விக்குறியாகத்தான் உள்ளது. தினந்தோறும் எங்கோ ஒரு மூளையில், ஏதோ ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொண்டுதான் இருக்கிறார்கள்.
அந்த வகையில் டெல்லியில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 8 வயது சிறுமி ஒருவர் திங்கட்கிழமை மாலை தனது நண்பர்களுடன் விளையாடுவதற்காக வெளியில் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன் தன்னுடன் விளையாட வருமாறு சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளான்.
அதன் பின் வீட்டிற்கு வந்த சிறுமி தனது பெற்றோரிடம், தனக்கு மிகவும் வயிறு வலிப்பதாக கூறி அழுதுள்ளார். குழந்தையை பரிசோதித்து பார்த்ததில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்ததை கண்டறிந்துள்ளன. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியபோது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் வீட்டின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகள் சோதனை செய்த போலீசார் 12 வயது சிறுவன் மற்றும் 11 வயது சிறுவன் இருவரும் இந்த குற்றத்தில் ஈடுபட்டதை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் போக்ஸோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறுமி உயிருக்கு போராடி வரும் நிலையில், சிறுவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…