இன்று செப்டம்பர் 11 அதாவது 9/11! உலக வரலாற்றில் மனிதகுலத்தை தாக்கியதாக அறியப்பட்ட ஒரு தேதி,மனிதகுலத்திற்கான மதிப்புகள் மூலமே இது போன்ற தாக்குதல்களை தவிர்க்க முடியும் -பிரதமர் மோடி
கொடூரமான 9/11 இரட்டை கோபுர தாக்குதல் நடந்து இன்றுடன் 20 ஆம் ஆண்டு கடைபிடிக்கப்படுகிறது.இந்த தாக்குதல் பற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இது மனிதநேயத்தின் மீதான தாக்குதல் என்றும்,மனிதகுலத்திற்கான மதிப்புகளை புகுத்துவதன் மூலம் மட்டுமே இதுபோன்ற துயரங்களை தவிர்க்க முடியும் என்றார்.
“இந்த நாளில்,ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, செப்டம்பர் 11, 1893 அன்று, சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் நடைபெற்ற உலக மத பாராளுமன்றத்தின் உலகளாவிய மேடையில் இந்தியாவின் நற்குணங்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார்,என்று பிரதமர் மோடி கூறினார்.
மனிதகுலத்தின் இந்த மதிப்புகள் மூலம் மட்டுமே 9/11 போன்ற சோகங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பதை இன்று உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது.
20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த நாளில் மொத்தமாக 2,977 பேர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தனர். செப்டம்பர் 11, 2001 அன்று, அமெரிக்கா அதன் வரலாற்றில் மிக மோசமான பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்டது.
பயங்கரவாத தாக்குதல்களில் 3,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். வெறும் 102 நிமிட இடைவெளியில், நியூயார்க்கின் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் அல்கொய்தா இயக்கத்தால் கடத்தப்பட்ட விமானங்களால் தகர்க்கப்பட்டது.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…