இன்று செப்டம்பர் 11 அதாவது 9/11! உலக வரலாற்றில் மனிதகுலத்தை தாக்கியதாக அறியப்பட்ட ஒரு தேதி,மனிதகுலத்திற்கான மதிப்புகள் மூலமே இது போன்ற தாக்குதல்களை தவிர்க்க முடியும் -பிரதமர் மோடி
கொடூரமான 9/11 இரட்டை கோபுர தாக்குதல் நடந்து இன்றுடன் 20 ஆம் ஆண்டு கடைபிடிக்கப்படுகிறது.இந்த தாக்குதல் பற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இது மனிதநேயத்தின் மீதான தாக்குதல் என்றும்,மனிதகுலத்திற்கான மதிப்புகளை புகுத்துவதன் மூலம் மட்டுமே இதுபோன்ற துயரங்களை தவிர்க்க முடியும் என்றார்.
“இந்த நாளில்,ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, செப்டம்பர் 11, 1893 அன்று, சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் நடைபெற்ற உலக மத பாராளுமன்றத்தின் உலகளாவிய மேடையில் இந்தியாவின் நற்குணங்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார்,என்று பிரதமர் மோடி கூறினார்.
மனிதகுலத்தின் இந்த மதிப்புகள் மூலம் மட்டுமே 9/11 போன்ற சோகங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பதை இன்று உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது.
20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த நாளில் மொத்தமாக 2,977 பேர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தனர். செப்டம்பர் 11, 2001 அன்று, அமெரிக்கா அதன் வரலாற்றில் மிக மோசமான பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்டது.
பயங்கரவாத தாக்குதல்களில் 3,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். வெறும் 102 நிமிட இடைவெளியில், நியூயார்க்கின் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் அல்கொய்தா இயக்கத்தால் கடத்தப்பட்ட விமானங்களால் தகர்க்கப்பட்டது.
லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 31,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ஆம்…
சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவர் வி. நாராயணன், நடப்பு நிதியாண்டில் (2025-26) 9 முக்கிய…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இந்தியாவுக்கு எதிரான புதிய வரி மற்றும்…
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) ஆணவக் கொலை செய்யப்பட்ட…
டெல்லி : இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் குறித்து சமீபத்திய DGCA தணிக்கைகள் பல முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளன.…