சத்தீஷ்கரில் ஆட்டோ மீது மோதிய எஸ்யூவி கார்: 9 பேர் பலி..!

Published by
Sharmi

சத்தீஸ்கரில் உள்ள பஸ்தார் மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இன்று பிற்பகல் சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள கோண்டாகான் தெஹ்சில் அமைந்துள்ள போர்கான் என்ற கிராமத்தில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 7 பேர் பலத்த காயமடைந்ததாகவும் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். அவ்விடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 30 இல் ஒரு ஆட்டோ ரிக்சா மீது ஒரு எஸ்யூவி மோதியுள்ளது. இந்த ஆட்டோ ரிக்சாவில் மொத்தம் 16 பேர் இருந்துள்ளனர்.

இந்த விபத்திற்கு பின் எஸ்யூவி ஸ்கார்பியோவின் டிரைவர் காரை விட்டு உடனடியாக தப்பி ஓடியுள்ளார். இந்த ஆட்டோ ரிக்சாவில் இருந்தவர்கள் கோட்மா கிராமத்தில் நடந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு, பின்னர் தங்களது சொந்த ஊரான பாண்டேத்துக்குத் திரும்பியுள்ளனர். அப்போது ​​ராய்பூரிலிருந்து 200 கிமீ தொலைவில் உள்ள ஃபராஸ்கான் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட போர்கான் திருப்பத்திற்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும், மோதிய அந்த எஸ்யூவி ஜக்தல்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்துள்ளது. இதன் பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை அருகில் உள்ள ஃபராஸ்கான் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராய்பூரில் உள்ள மருத்துவமனைக்கு காயமடைந்தவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் ஆட்டோ ரிக்சாவில் இருந்த டிரைவர் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாதிக்கப்பட்ட அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், எஸ்யூவியில் தப்பியோடியவர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

6 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

7 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

8 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

8 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

9 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

9 hours ago