ஆபாச படத்தில் நடித்தாயா? – மனைவியை கத்தியால் குத்தி கொன்ற ஆட்டோ டிரைவர்!

Published by
Edison

பெங்களூருவில் ஆபாசப் படங்களுக்கு அடிமையான 40 வயதான ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது மனைவி ஆபாச படத்தில் நடித்ததாக நினைத்துக் கொண்டு,குழந்தைகள் முன்னிலையில் அவரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த ஆட்டோ டிரைவரான பாஷா மற்றும் முனீபா தம்பதிக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. அவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில்,குற்றம் சாட்டப்பட்ட ஜஹீர் பாஷா,இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு ஆபாசப் படத்தைப் பார்த்து, அதில் அவரது மனைவி முபீனா (35) இருந்ததாக சந்தேகிக்கத் தொடங்கினார்.

மனைவியின் மீது நம்பிக்கை இல்லாத அவர் தனது மனைவியை  துன்புறுத்தத் தொடங்கினார்.இந்த நிலையில்,கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி தங்கள் குழந்தைகள் முன்னிலையிலேயே பாஷா தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

இதற்கிடையில்,இரண்டு மாதங்களுக்கு முன்,பாஷா,குடும்ப விழா ஒன்றில் முனீபாவை தாக்கி,அடித்ததாக கூறப்படுகிறது.மேலும்,சுமார் 20 நாட்களுக்கு முன்பு,பாஷா தனது மனைவியை மிகவும் மோசமாகத் தாக்கியதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சூழலில் தனது மனைவியை ஆட்டோ டிரைவர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.இதனைத் தொடர்ந்து,உயிரிழந்த முனீபாவின் தந்தை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் பாஷாவை கைது செய்த காவல்துறை அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

10 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

12 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

16 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

17 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

19 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

19 hours ago