Heat Stroke Death [Image source : file image ]
மகாராஷ்டிரா மாநிலத்தின் தஹானு தாலுகாவில் உள்ள ஒசர் வீரா கிராமத்தைச் சேர்ந்தவர சோனாலி வாகாட். இவர் கர்ப்பமாகி 9 மாதத்தில் ஆன நிலையில், ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு வருகின்ற 27-ஆம் தேதி குழந்தை பிறக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் அவரிடம் கூறியுள்ளார்கள்.
இதனையடுத்து, இன்று சோனாலி வாகாட்க்கு திடீரென பிரசவ வலி அதிகமான காரணத்தால் 3.5 கிமீ தூரம் கோடை வெயிலின் நடுவே நெடுஞ்சாலையில் நடந்தே ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு சென்றுள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் இது சாதாரண வலி என்று கூறி மருத்துங்களையும் கொடுத்துள்ளார்.
அதனை தொடர்ந்து,மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக போக்குவரத்து வசதி இல்லாததால் 3.5 கி.மீ தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு வெயிலில் நடந்து சென்று மீண்டும் வீட்டிற்கு நடந்தே வந்துள்ளார். மொத்தமாக 7 கிமீ அவர் நடந்தே வெயிலில் சென்ற காரணத்தால் உடல்நல குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
சிறிது நேரத்திலே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவலை மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவர் தெரிவித்தார். மேலும், 7 கி.மீ வரை வெயிலில் நடந்ததால் உடல்நலம் மோசமாகி கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…
மலேசியா : தாய்லாந்து - கம்போடியா ஆகிய இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக மலேசிய பிரதமர்…
டெல்லி : பஹல்காமில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர்…