Categories: இந்தியா

மக்களே!! ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க அறிய வாய்ப்பு.!

Published by
கெளதம்

ஆதார் அட்டை புதுப்பிப்பு : இந்தியாவில் தனிநபர் ஆவணத்தில் முக்கியமாக திகழ்வது ஆதார் அட்டை ஆகும். முன்னதாக, ஆதார் அட்டையில் உள்ள முகவரி, தந்தை பெயர் உள்ளிட்ட விவரங்களில் ஏதெனும் திருத்தங்கள் இருந்தால், அதனை நாளை (ஜூன் 14ஆம் தேதி) வரை மட்டுமே இலவசமாக திருத்தம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்பொழுது, அந்த காலக்கெடுவை செப்டம்பர் 14ம் தேதி வரை நீட்டித்துள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெரிவித்துள்ளது. ஆதார் உடன் பதிவு செய்யப்பட்ட செல்ஃபோன் எண்ணுக்கு கிடைக்கும் OTP மூலம் விவரங்களை திருத்தம் செய்ய முடியும்.

இருப்பினும், இந்த சேவை myAadhaar போர்ட்டலில் புதுப்பித்தால் மட்டுமே இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவே, ஆதார் மையங்களில் புதுப்பித்தால் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதிலும் குறிப்பாக, உங்கள் ஆதாரில் கருவிழி ஸ்கேன், கைரேகைகள் மற்றும் முகப் புகைப்படங்கள் போன்ற பயோமெட்ரிக் தகவல்களை ஆன்லைனில் புதுப்பிக்க முடியாது. மேலும், ஆதார் அட்டையில் உள்ள பாலின விவரங்களையும் ஒருமுறை மட்டுமே புதுப்பிக்க முடியும்.

ஆதார் அட்டை விவரங்களை இலவசமாக புதுப்பிப்பது எப்படி?

  • உங்கள் 16 இலக்க ஆதார் எண்ணைப் பயன்படுத்தி https://myaadhaar.uidai.gov.in/ இல் உள்ளே நுழைய முடியும்.
  • இப்பொது கேப்ட்சாவை உள்ளீடு செய்து OTP பயன்படுத்தி உள்நுழை என்பதைக் கிளிக் செய்யவும்.
  • பின்னர், ஆதாரில் ஏற்கனவே இருக்கின்ற மொபைல் எண்ணில் நீங்கள் பெற்ற OTP குறியீட்டை உள்ளிடவும்.
  • இப்போது நீங்கள் போர்ட்டலை அணுக முடியும்.
  • அதில், ‘ஆவண புதுப்பிப்பு’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும், அதில் தற்போதைய விவரங்கள் காட்டப்படும்.
  • இதில், உங்கள் அடையாளம் மற்றும் முகவரியில் மாற்றம் இருந்தால், அதனை கிளிக் செய்து தேவையான ஆதாரத்தைப் பதிவேற்றவும்.
  • பின்னர், ‘சமர்ப்பி’ என்பதை கிளிக் செய்யவும்.
  • 14 இலக்க கொண்ட புதுப்பிப்பு கோரிக்கை எண் (URN) உருவாக்கப்பட்ட பிறகு, புதுப்பிப்பு கோரிக்கை ஏற்கப்படும்.
Published by
கெளதம்

Recent Posts

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

2 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

3 hours ago

விருதுநகர் : பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…

3 hours ago

சபாஷ் சரியான போட்டி…குகேஷை அசால்ட்டாக வீழ்த்திய பிரக்ஞானந்தா!

குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…

4 hours ago

மகளிர் உரிமைத்தொகை பெற நாளை முதல் விண்ணப்பம்!

சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…

5 hours ago

தற்காலிகமாக விலகிய தவெக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்! காரணம் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…

5 hours ago