PM Modi [Image source : Twitter/@narendramodi]
பிரதமர் மோடியின் மான் கி பாத் நிகழ்ச்சியினை கேட்காத மாணவர்களுக்கு வினோத தண்டனையை சண்டிகர் மாநிலத்தில் ஒரு கல்லூரி நிர்வாகம் அளித்துள்ளது.
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை அன்று மனதின் குரல் (மான் கி பாத்) என்ற நிகழ்ச்சியில் உரையாற்றுவார். இது ஒலி வடிவில் பல்வேறு தளங்களில் வெளியிடப்படும். இதனை பொதுமக்கள் மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் கேட்பார்கள்.
பிரதமரின் இந்த உரையை கேட்க தவறிய கல்லூரி மாணவர்ளுக்கு சண்டிகர் கல்லூரி நிர்வாகம் வினோத தண்டனை வழங்கியுள்ளது. ஏப்ரல் 30 மனதின் குரல் 100வது நிகழ்ச்சியில் பிரதமரின் பேச்சை கேட்க சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் அந்த பல்கலைக்கழகத்தில் 36 மாணவர்கள் மட்டும் மான் கி பாத் நிகழ்ச்சியை கேட்கவில்லை என தெரிகிறது. இதனை தொடர்ந்து அந்த குறிப்பிட்ட 36 மாணவர்களை மட்டும் ஒரு வாரத்திற்கு கல்லூரி விடுதியில் இருந்து வெளியே செல்ல கூடாது என என சண்டிகர் கல்லூரி நிர்வாகம் வினோத தண்டனை அளித்துள்ளது.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…