India Vice President Jagadeep Dhankar [File Image]
Jagadeep Dhankhar : இந்தியா போன்ற ஜனநாயக நாட்டிற்கு யாருடைய அறிவுரையும் தேவையில்லை – துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர்.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை காவலில் உள்ளார். மாநில முதல்வர் கைது பற்றி அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் கேள்விகளை எழுப்பியிருந்தது. அதுபற்றி கருத்துக்கள் கூறியிருந்தது. மேலும், இதில் இந்திய பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் பற்றியும் அதில் விவாதங்கள், கருத்துக்கள் பகிரப்பட்டு இருந்தன.
இந்த நிகழ்வுகளுக்கு தற்போது கருத்து தெரிவித்துள்ள இந்திய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், அமெரிக்கா, ஜெர்மன் உள்ள நாடுகளின் கருத்துக்களுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்து உள்ளார். நேற்று டெல்லியில் நடைபெற்ற பொதுத்துறை நிறுவனத்தின் 70வது ஆண்டு விழாவில் இதனை குறிப்பிட்டு பேசினார்.
அவர் கூறுகையில், இந்தியா வலுவான நீதித்துறையை கொண்டுள்ள ஓர் மிக பெரிய ஜனநாயக நாடு. இது எந்த தனி நபராலும், எந்த ஒரு குழுவாலும் கட்டுப்படுத்த முடியாது. இந்தியாவின் ஆட்சி நிலைமை குறித்து யாரிடமிருந்தும் கருத்துக்களோ, உங்களது பாடங்களோ அது எங்களுக்கு (இந்தியாவுக்கு) தேவையில்லை.
இந்திய சட்டத்தின் கீழ் அனைவரும் சமமானவர்களே. கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக பலர் தெருக்களில் இறங்கி போராடுகின்றனர். இம்மாதிரியான செயல்கள் மூலம் மோசமான குற்றத்தை மறைக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள். இது போன்ற சட்ட விதிமுறை மீறல்களில் ஈடுபடுபவர்கள் தங்களை தாங்களே பலிகடாவாக மாற்றி விடுகிறார்கள். ஊழல் என்பது ஒரு மாற்று பாதை அல்ல. அது சிறைக்கு செல்லும்பாதை என்றும் துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் தனது உரையில் பேசினார்.
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…