வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன. உலகப் பொருளாதாரத்திற்கு தங்கள் இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து அமெரிக்காவும் சீனாவும் ஒரு உடன்பாட்டை எட்டியதாக இன்று ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் சனிக்கிழமை முதல் ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடத்தின. இது தொடர்பாக, அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட், இரு நாடுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு மட்டுமல்லாமல், […]
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். 4 நாள் பயணமாக தனது குடும்பத்தின் இந்தியா வந்திருக்கும் துணை அதிபர் ஜே.டி வான்ஸ் இந்தியா-அமெரிக்க உறவுகளை மேம்படுத்துவதும், வர்த்தக ஒப்பந்தம் மற்றும் புவிசார் அரசியல் முன்னுரிமைகளைப் பற்றி விவாதிக்க வருகை தந்திருக்கிறார். இந்த சந்திப்பு, டொனால்ட் ட்ரம்பின் குடியரசுத் தலைவர் பதவியேற்புக்குப் பின்னர் மோடியின் வாஷிங்டன் பயணத்தைத் தொடர்ந்து நடைபெற்றது. இருவரும் சந்தித்து பேசிய […]
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோர் காலை 10 மணி அளவில் டெல்லி விமானம் நிலையம் வந்தடைந்தார். 4 நாள்கள் அரசுமுறை பயணமாக வந்துள்ள அவர்களை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், விமானப்படை அதிகாரிகள் வரவேற்றனர். அவரது குழந்தைகள் இந்திய பாரம்பரிய உடையை அணிந்திருந்தனர். அவருடன் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (NSC) தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான மூத்த இயக்குநர் ரிக்கி கில் உட்பட அமெரிக்க […]
ஒட்டாவா : கனடாவின் லிபரல் கட்சி மக்களின் பெரிய ஆதரவுடன், மார்க் கார்னியை (59) நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் தலைமைத் தேர்தலில், 85.9% வாக்குகளுடன் அவர் வெற்றி பெற்றார். இதற்கு முன்னதாக பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் தான் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். ஜனவரி 7-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அவர் ” தனது குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்கான விருப்பம் மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் உள்ள […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து டொனால்ட் டிரம்ப் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், சீனா, மெக்சிகோ, கனடாவுக்கு 25% சுங்க வரியை விதிக்க உள்ளதாக அறிவித்திருந்தார். அமெரிக்காவின் உள்நாட்டு தொழில்கள் பாதுகாக்கப்படும் என்பதால் கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்த வரியை விதிக்க தான் முடிவு செய்திருப்பதாகவும் திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையாக இந்தியாவும் அமெரிக்காவுக்கு அதிகம் வரிவிதிப்பதாகவும் அதற்கு பதிலடி கொடுக்க நானும் அவர்கள் எவ்வளவு […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் விரைவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடைவிதிக்க உள்ளதாக புதிய தகவல் பரவி கொண்டு இருக்கிறது. பாதுகாப்பு காரணங்களை காரணம் சுட்டி காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்… காரணம் என்ன? பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் மக்கள் அமெரிக்காவுக்கு வந்தால் சில பயங்கரவாதிகள் ஊடுருவலாம். அப்படி நடந்தால் அது தங்களுடைய நாட்டு மக்களுக்கு […]
கனடா : கனடாவில் பயணிகள் விமானம் தரையிறங்கும்போது தலைக்குப்புற கவிழ்ந்ததில் பலர் காயமடைந்தனர். டெராண்டோ பியர்சன் ஏர்போர்ட்டில் தரையிறங்கிய டெல்டா 4819 விமானம், பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியிருக்கிறது. விபத்தை தொடர்ந்து பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டனர். மேலும், அதில் பயணம் செய்த 76 பயணிகள் 4 ஊழியர்கள் என, மொத்தம் 80 பேர் அந்த விமானத்தில் பயணித்த நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், 18 பேர் காயமும் மூன்று பேர் […]
அமெரிக்கா : மாநிலத்திற்கு என்ன தான் ஆச்சு என்கிற வகையில், இந்த ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொழுந்துவிட்டு தீ ஒரு பக்கம் பரவி வருகிறது. இதுவரை 40,000க்கும் அதிகமான ஏக்கர் நிலம், 12,000க்கும் அதிகமான கட்டடங்கள் தீக்கிரையான நிலையில், 25 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு பக்கம் தீ பரவி வரும் சூழலில் தீயணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். மற்றொரு பக்கம் மிசிகன், நியூயார்க், பின்சில்வேனியா, மற்றும் மற்ற சில மாநிலங்களில் பனிப்புயல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த […]
வாஷிங்டன் : நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்றுக்கொண்டார். இவருடைய பதவியேற்பு விழாவானது இன்று வாஷிங்டன் டிசி-யில் உள்ள அரங்கிற்குள் நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அதிபர்கள் ஜோ பைடன், பாரக் ஒபாமா என எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் , பன்னாட்டு தொழிலதிபர்களான எலான் மஸ்க், சுந்தர்பிச்சை என பலர் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் ஷங்கர் […]
வாஷிங்டன் : கடந்த ஆண்டு நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 47வது அதிபராக நேற்று (ஜனவரி 20) தனது ஆதரவாளர்களுக்கு முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் பதவியேற்கும் விழாவானது வாஷிங்டன் டிசி-யில் அரங்கிற்குள் நடைபெற்றது. கோலாகலகமாக நடைபெற்ற இந்த விழாவில் முன்னாள் அதிபர்கள் ஜோ பைடன், பாரக் ஒபாமா என எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் , பன்னாட்டு தொழிலதிபர்களான எலான் மஸ்க், சுந்தர்பிச்சை என பலர் கலந்து கொண்டனர். அதிபராக டொனால்ட் […]
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47வது அதிபராக நேற்று (ஜனவரி 20) டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றுக்கொண்டார். வழக்கமாக வாஷிங்டன் டிசி-யில் திறந்தவெளி பகுதியில் நடைபெறும் இந்த பதவியேற்பு விழா இந்த முறை அரங்கிற்குள் நடைபெற்றது. கோலாகலகமாக நடைபெற்ற இந்த விழாவில் முன்னாள் அதிபர்கள் ஜோ பைடன், பாரக் ஒபாமா என எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் , பன்னாட்டு தொழிலதிபர்களான எலான் மஸ்க், சுந்தர்பிச்சை என பலர் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் ஷங்கர் […]
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். இந்த சூழலில், தற்போதைய அதிபராக இருக்கும் ஜோ பைடன் USA Today எனும் அமெரிக்க செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பேசியபோது “அமெரிக்க அதிபர் தேர்தலில் 2வது முறை போட்டியிட்டிருந்தால் டிரம்பை தோற்கடித்திருப்பேன்” என வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்த அளவுக்கு இவர் உறுதியுடன் இதை கூறியதற்கு காரணமே ஏற்கனவே, ஜோ பைடன் டிரம்ப்பை வீழ்த்தி அதிபராக […]
நியூ யார்க் : குல்தீப் குமார் எனும் 35 வயது மதிக்கத்தக்க நபர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் அமெரிக்க அரசிடம் புகார் அளித்து இருந்தனர். இறுதியாக நியூ யார்க் மாகாணம் ஓசோன் பகுதி பூங்காவில் 2024, அக்டோபர் 22ஆம் தேதியன்று அவர் காணப்பட்டார் என கூறப்பட்டது. இதனை அடுத்து, அமெரிக்க FBI தீவிர சோதனை மேற்கொண்டது. அதில், நியூ ஜெர்சி மாகாணத்தில் மான்செஸ்டர் […]
வாஷிங்டன் : அமெரிக்காவில் குடியேறி தொழில் ரீதியான குடியுரிமை (விசா), படிப்பதற்கான குடியுரிமை (விசா) போன்ற தற்காலிக குடியுரிமைகளை பெற்று வசிப்பவர்களை தவிர்த்து அங்கு நிரந்தர அமெரிக்க குடிமகன்களாக இருக்க அயல்நாட்டினர் நீண்ட வருடங்கள் அமெரிக்காவில் வாழ்ந்து கிரீன் கார்டு பெற வேண்டும். இல்லையென்றால், அமெரிக்காவில் பிறந்து இருந்தால் எளிதாக குடியுரிமை (விசா) கிடைத்துவிடும். இந்த பிறப்பால் குடியுரிமை பெற்ற அயல்நாட்டினர் அங்கு கணிசமான அளவில் வசித்து வருகின்றனர். அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வசிப்பதில் இந்தியர்கள் மட்டும் […]
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது விதமான ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ரஷ்யா இராணுவ வீரர்கள், வட கொரியா சில வீரர்களும் உயிரிழந்ததாகச் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. ஏவுகணையின் பெயர் புயல் நிழல் ஏவுகணை (Storm Shadow Missile) உலகிலேயே புயல் நிழல் ஏவுகணை பயன்படுத்துவது இதுவே முதல் முறை என்பதும் தெரியவந்திருக்கிறது. அதைப்போல, உக்ரைன் மீது கண்டம் […]
அமெரிக்கா: 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருகிறது. இந்த போருக்கான முக்கிய காரணமே, நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்த்துக்கொள்ள கூடாது, அதனை தடுப்பதற்காக தான் ரஷ்யா இந்த போரை நடத்தி வருகிறது. இந்த போரில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகளை வழங்கி வருவதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதைப்போல, ரஷ்யாவின் நட்பு நாடான வடகொரியா, ரஷ்யாவுக்கு ஏவுகணைகள் மற்றும் அணு […]
அமெரிக்கா : கலிபோர்னியா மாநிலத்தில் 11 வயதான சிறுமி ஒருவர் கண்காட்சிக்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கத்தோடு செல்லமாக ஒரு ஆட்டை வளர்ந்து வந்தாள். ஆனால், இந்த பிஞ்சு மனதிற்கு அந்த ஆடு என்றைக்காவது ஒரு நாள் ஏலத்திற்குச் சென்றுவிடும் என்று தெரியாமல் வளர்த்துக்கொண்டு இருந்தாள். ஏனென்றால், அந்த ஆடு சிறுமிக்குக் கொடுக்கப்பட்டதன் நோக்கம், விவசாயம் மற்றும் சமூகத் திறன்களைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய காரணத்துக்காக மட்டும் தான். எனவே, இந்த திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட நாளில் […]
அமெரிக்கா : வேற்றுகிரகவாசிகள் பூமியில் இருக்கிறார்களா இல்லையா? என்கிற கேள்வி விடை தெரியாத மர்மமாக இருந்து வருகிறது. இந்த சூழலில், இந்த நீண்ட நாள் மர்மங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக நாசாவின் தொடர்புடையாளர் திரைப்பட தயாரிப்பாளர் சைமன் ஹாலண்ட் கடந்த மாதம் “வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான சான்றுகளைப் பூமியில் உள்ள தொலைநோக்கிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஒரு மாதத்தில் அது வெளியிடப்படும் எனத் தெரிவித்து இருந்தார். இவர் பேசியதற்கு முன்னதாகவே, அதாவது கடந்த ஜூன் மாதம் ஏலியன் இருப்பது குறித்து […]
பென்சில்வேனியா : தேர்தல் நெருங்கிவிட்டது என்றாலே தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வித்தியாச வித்தியாசமாக எதாவது செய்து பிரச்சாரம் செய்து வாக்குகளைச் சேகரிப்பார்கள். குறிப்பாக அதில் பலரும் கையாண்ட யுக்தி என்றால் சமையலை வைத்துத் தான். இந்தியாவில் பல வேட்பாளர்கள் தேர்தல் தொடங்குவதை முன்னிட்டு வடை, மற்றும் தோசை சுடுவார்கள்…அதைப்போலச் சிலர் டீ ஆற்றுவார்கள். இந்த அரசியல் யுக்தி இந்தியாவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் பிரபலமாகிவிட்டது போல. ஏனென்றால், அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் டோனால்ட் டிரம்ப் அதைப்போல […]
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்க செல்லும் பிரதமர் மோடி, அங்கு அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடைபெறும் குவாட் மாநாட்டில் பங்கேற்கிறார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் டெல்வாரே நகரில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உள்பட உலகத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். அதிபர் ஜோ பைடன் தலைமையில் […]