IIT Student Stripped [Image Source : X/@Benarasiyaa]
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் (BHU) தனது ஆண் நண்பருடன் நடந்து சென்ற, ஐஐடி மாணவியை அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்து வலுக்கட்டாயமாக முத்தமிட்டுள்ளனர்.
அந்த பெண்ணின் ஆடையையும் கழற்றி அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். நேற்று (புதன்கிழமை) பிற்பகல் அளவில் நடந்த இந்த சம்பவத்தையடுத்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நிறுவன இயக்குநர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
கல்லூரியின் பெரும்பாலான பகுதிகளில் பாதுகாப்புப் பணியாளர்கள் இல்லாததால், வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பாக இல்லை என்றும், குடியிருப்பு மற்றும் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவிகளும் பழுதடைந்துள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட அந்த பெண், அவரது பேராசிரியரின் உதவியோடு போலீசில் புகாரளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், லங்கா காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல குழுக்கள் அமைக்கப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களை கண்டுபிடித்துக் கைது செய்ய போலீசார் முயற்சி செய்து வருகின்றன.
இதற்கிடையில், பல்கலைக்கழகமும் பாதுகாப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன்படி, வளாகத்தின் அனைத்து வாயில்களும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை மூடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவத்தைத் தொடர்ந்து, உத்தரபிரதேச காங்கிரசும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…