Goat [file image]
சென்னை : பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஏலத்தில் ஆடு ஒன்று 7.5 லட்சத்திற்கு விற்கப்பட்டது.
பக்ரீத் பண்டிகை வரும் ஜூன் மாதம் 16-ஆம் தேதி கொண்டாடபட இருக்கும் நிலையில், இதனை முன்னிட்டு ஆடுகளின் விற்பனை தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில் ஆடு விற்பனை மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.
அங்கு தான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், ஒரு ஆடு ஏலத்தில் ரூ.7.5 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது. இவ்வளவு விலைக்கு ஆட்டை யார் வாங்கியது? அப்படி என்ன இந்த ஆட்டில் இருக்கிறது நீங்கள் கேட்கலாம். இந்த ஆடு கிட்டத்தட்ட 161 கிலோ எடை கொண்டதாம்.
இந்த ஆடு குறித்து அதனுடைய உரிமையாளர் ஷஹாப் அலி பேசியதாவது ” இந்த ஆட்டிற்கு தற்போது 2 வயது ஆகிறது. இந்த ஆட்டை நான் ராஜஸ்தானில் இருந்து வாங்கி வந்தேன். ஒரு வருடமாக காட்டில் வசித்து வந்ததால், ஆட்டிற்கு சரியான பராமரிப்பு இருக்கவேண்டும் என்பதால், நான் கடந்த ஓராண்டாக ஆட்டை இங்கு கவனித்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.
இருப்பினும் இவ்வளவு விலை கொடுத்து இந்த ஆட்டை யார் வாங்கினார் என்று அவருடைய விவரத்தை ஆட்டின் உரிமையாளர் ஷஹாப் அலி கூறவில்லை. இருப்பினும் இவ்வளவு விலைக்கு ஆட்டை விலைகொடுத்து வாங்கி இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…