Goat [file image]
சென்னை : பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஏலத்தில் ஆடு ஒன்று 7.5 லட்சத்திற்கு விற்கப்பட்டது.
பக்ரீத் பண்டிகை வரும் ஜூன் மாதம் 16-ஆம் தேதி கொண்டாடபட இருக்கும் நிலையில், இதனை முன்னிட்டு ஆடுகளின் விற்பனை தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில் ஆடு விற்பனை மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.
அங்கு தான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், ஒரு ஆடு ஏலத்தில் ரூ.7.5 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது. இவ்வளவு விலைக்கு ஆட்டை யார் வாங்கியது? அப்படி என்ன இந்த ஆட்டில் இருக்கிறது நீங்கள் கேட்கலாம். இந்த ஆடு கிட்டத்தட்ட 161 கிலோ எடை கொண்டதாம்.
இந்த ஆடு குறித்து அதனுடைய உரிமையாளர் ஷஹாப் அலி பேசியதாவது ” இந்த ஆட்டிற்கு தற்போது 2 வயது ஆகிறது. இந்த ஆட்டை நான் ராஜஸ்தானில் இருந்து வாங்கி வந்தேன். ஒரு வருடமாக காட்டில் வசித்து வந்ததால், ஆட்டிற்கு சரியான பராமரிப்பு இருக்கவேண்டும் என்பதால், நான் கடந்த ஓராண்டாக ஆட்டை இங்கு கவனித்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.
இருப்பினும் இவ்வளவு விலை கொடுத்து இந்த ஆட்டை யார் வாங்கினார் என்று அவருடைய விவரத்தை ஆட்டின் உரிமையாளர் ஷஹாப் அலி கூறவில்லை. இருப்பினும் இவ்வளவு விலைக்கு ஆட்டை விலைகொடுத்து வாங்கி இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…