Dead [Representative Image]
தமிழகத்தை சேர்ந்த மதன்குமார் எனும் மருத்துவக்கல்லூரி மாணவர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ கல்லூரியில் ( Rajendra Institute of Medical Sciences – RIMS) முதுகலை தடவியல் துறையில் 2ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இன்று அதிகாலை RIMS மருத்துவ கல்லூரி விடுதி எண் 5 அருகே கீழே உள்ள முட்புதரில் பாதி எரிந்த நிலையில் மதன்குமார் உடலானது கிடந்துள்ளது. உடனடியாக ராஞ்சி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர்.
மக்களவையில் கேள்வி எழுப்ப பணம் பெற்ற புகார்.! திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி விசாரணைக்கு ஆஜர்.!
மதன்குமார் சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மதன்குமார் மருத்துவ கல்லூரி விடுதியில் அறை எண் 79இல் தங்கி இருந்துள்ளார். அவர் உடல் கிடந்த மாடியில் இன்ஜின் ஆயில் சிதறி கிடந்துள்ளது. ஒருவர் கால் தடம் இருந்துள்ளது என்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
சம்பவ இடத்தில் காவல்துறையினர் மற்றும் தடவியல் துறையினர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். மதன்குமாரின் செல்போன், லேப்டாப் ஆகியவைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகு தான் மதன் குமார் உயிரிழப்பு கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ள முடியும் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…
அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி…
கனடா : கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான்…