[Image source : The Hindu]
டெலிகிராமில் வெளியான CoWIN தகவல்கள் தொடர்பாகபீகாரை சேர்ந்த ஒருவர் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் டெலிகிராம் எனும் மொபைல் செயலியில் உள்ள பாட் வசதி எனும் பக்கத்தில் யாருடைய ஆதார் எண் அல்லது மொபைல் எண்ணை உள்ளீடு செய்தால் உடனடியாக அவர்கள் பற்றிய முழுவிவரமும் வெளியாகி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதாவது கொரோன தடுப்பூசி செலுத்தும் போது நாம் கொடுத்த ஆதார் எண் , மொபைல் எண் ஆகியவை மூலம் இந்த தகவல்கள் கசிந்தது பின்னர் போலீசார் கண்டறிந்தனர். இதனை அடுத்து, விசாரணையை தீவிரப்படுத்திய டெல்லி போலீசார், தற்போது ஒருவரை கைது செய்துள்ளனர்.
சமூக ஊடக தளங்களில் CoWIN பக்கத்தில் இருந்து தரவுகளை கசியவிட்டதாக கூறி பீகாரை சேர்ந்த ஒருவரை டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். அவருக்கு உதவியதாக மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட பீகார் மாநிலத்தவர் அவரது வீட்டில் இருந்தே கைது செய்யப்பட்டதாக கூறிய போலீஸார், அவரது தாயார் சுகாதார பணியாளராக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…