Categories: இந்தியா

300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு.!

Published by
கெளதம்

மத்தியப் பிரதேசத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு.

மத்தியப் பிரதேசத்தின் செஹோர் மாவட்டத்தில் ஜூன் 6 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தை கிட்டத்தட்ட 50 மணி நேரத்திற்குப் பிறகு நேற்று மீட்கப்பட்டது.

ஆனால், துரதிர்ஷ்டவசமா 50 மணி நேரம் போராட்டத்திற்கு பின் மயக்க நிலையில், மீட்கப்பட்ட ஸ்ரீஷ்டி குஷ்வாஹா என்ற அந்த குழந்தை, செஹோர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

முதலில் 40 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்ட சிறுமி, மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இயந்திரங்களால் ஏற்பட்ட அதிர்வுகளால் மேலும் 100 அடிக்கு கீழே நழுவிவிட்டதாக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

எல்லா முயற்சிகளையும் செய்தும் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று செஹோர் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் திவாரி வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விவசாய நிலத்தின் உரிமையாளர் மற்றும் ஆழ்துளை கிணற்றுக்கு பொறுப்பான நபர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக செஹோர் எஸ்பி மாயக் அவஸ்தி தகவல் தெரிவித்துள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

காத்திருந்து…காத்திருந்து காலங்கள்… இன்று நடைபெறுமா பெங்களூர் கொல்கத்தா போட்டி?

பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…

12 minutes ago

90 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து சாதனை படைத்த ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா!

மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…

41 minutes ago

இன்று இந்த 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…

1 hour ago

மே 29, 30ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…

1 hour ago

ஹிட் மேன் ஹாப்பி அன்னாச்சி…, வான்கடேவில் ரோஹித் சர்மா பெயரில் ஸ்டாண்ட்..!

மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…

13 hours ago

மாமனாக வென்றாரா நடிகர் சூரி.? ட்விட்டர் விமர்சனம் இதோ.!

சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…

14 hours ago