Categories: இந்தியா

உயிருடன் ஆமையை எரித்த விவகாரம்! 2 பேரை கைது செய்த போலீசார்!

Published by
பால முருகன்

உத்தரபிரதேசம் : சமீபத்தில் சமூக ஊடகங்களில் இரண்டு பேர் உயிருடன் ஆமை ஒன்றை தீ வைத்து எரித்த அதிர்ச்சியான வீடியோ வைரலாகி இருந்தது. வீடியோவில் தீ வைத்து எரிக்கும் போது ஆமை துடி துடித்து உயிரிழந்த காட்சி பலரையும் கண் கலங்கவும் வைத்தது. இந்த வீடியோ மிகவும் வைரலாக பரவி வந்த நிலையில், உடனடியாக காவல்துறையினர் நடிவடிக்கையில் ஈடுபட்டனர்.

விசாரணை நடத்தி, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட  இரு நபர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தகவல்களின்படி, தியோபந்தின் ராஜுபூர் பகுதியில் உள்ள ரான்சுவா கிராமத்தில் இருவரும் இந்த சம்பவத்தை செய்துள்ளதாகவும்,  குற்றவாளிகள் ஆகாஷ் மற்றும் சுனில் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வந்து இருக்கிறது.

முன்னதாக குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யப்பட்டதாகவும்,  ஆதாரங்கள் இருந்தபோதிலும் விரைவில் அவர்களை விடுவித்ததாகவும் செய்திகள் பரவியது. ஆனால், உண்மை என்னவென்றால்,  ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார்  ஞாயிற்றுக்கிழமை தெளிவுபடுத்தினர்.

இருவரையும் போலீசார் விசாரித்து, நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இரு நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சஹாரன்பூர் எஸ்பி தேஹத் சாகர் ஜெயின் தெரிவித்தார். உயிரோடு இருந்த ஆமையை நெருப்பை வைத்து எரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

1 hour ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

3 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

3 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

4 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

5 hours ago

MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…

5 hours ago