Thunder [File Image]
பீகார் : இன்றய காலகட்டத்தில் ரீல்ஸ் செய்வது வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது. ஒரு சிலர் ரீல்ஸ் மீது இருக்கும் அதிக ஆர்வத்தால் ஆபத்தை உணறாமல் ரீல்ஸ் எடுப்பதற்காக ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு உயிர்தப்பிப்பது உண்டு. அப்படி தான் பீகாரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது வீட்டின் மாடியில் ரீல்ஸ் செய்து கொண்டிருந்த சமயத்தில் மின்னல் தாக்குதலைத் தவிர்த்து காயமில்லாமல் தப்பினார்.
இந்த சம்பவம், அவருடைய தொலைபேசியில் உள்ள கேமராவில் பதிவாகியது. பீகாரில் கனமழை பெய்து வந்த நிலையில், பெண் ஒருவர் ரீல்ஸ் செய்ய ஆசைப்பட்டு வேகமாக தனது வீட்டின் மாடியில் ஏறிக்கொண்டு மழையில் ரீல்ஸ் செய்து போட்டால் நன்றாக லைக் வரும் என எண்ணி மழையில் நடனம் ஆட தொடங்கினார்.
அந்த சமயத்தில் மழை மிகவும் வேகமாக பெய்து வந்த நிலையில், திடீரென சிவப்பு நிறத்தில் மின்னல் அடித்தது. இதனை பார்த்த அந்த பெண் வேகமாக தப்பி ஓடினார். அந்தப் பெண்ணின் பின்புறத்தில் வீட்டின் மேற்கூரையில் மின்னல் தாக்கியது. இதனால், அலறி அடித்த ஓடிய அந்த பெண் போனை எடுக்காமல் ஓடினார்.
எனவே மின்னல் தாக்கிய அந்த வீடியோ போனில் பதிவான நிலையில் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், ஒரே நாளில், பீகாரில் பல மாவட்டங்களில் மின்னல் தாக்கி குறைந்தது 8 நபர்கள் பலியானார்கள். PTI படி, பாதிக்கப்பட்டவர்களில் பாகல்பூர் மற்றும் முங்கரில் 2 நபர்களும், ஜமுய், கிழக்கு சம்பாரண், மேற்கு சம்பாரண் மற்றும் அராரியா மாவட்டங்களில் தலா ஒருவரும் அடங்குவர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அலுவலகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா vs பாகிஸ்தான் போர் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்த நிலையில், பாகிஸ்தான் அத்துமீறினால் நாங்கள் அதற்கு பதிலடி கொடுப்போம்…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…
அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…
ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…