Categories: இந்தியா

குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்த பெண்! கதிகலங்க வைத்த அதிர்ச்சி வீடியோ!

Published by
பால முருகன்

மகாராஷ்டிரா : டோம்பிவிலியில் பெண் ஒருவர் கட்டிடத்தின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக அந்த பெண் வேதனை அடைந்து இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது.

தானே நகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட டோம்பிவிலி மன்படா காவல் நிலையப் பகுதியை சேர்ந்த ப்ரீத்தி உமாபாரதி என்ற பெண்ணுக்கும் அவருடைய குடும்பத்துக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து போன அந்த பெண் பால்கனியின் விளிம்பில் நின்று கொண்டு கீழே விழுவதற்கு முயற்சி செய்தார்.

அப்போது அங்கிருந்தவர்கள் வேண்டாம் அவசர பட்டு இந்த முடிவை எடுக்காதீர்கள் என்பது போல கூறியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் சொல்வதை எல்லாம் கொஞ்சம் கூட கேட்காத ப்ரீத்தி உமாபாரதி  மேலே இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். இந்த சம்பவத்தை அருகில் உள்ள பிளாட்டில் இருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

கீழே விழுந்த பெண்ணிற்கு தலையில் அடிபட்டு மயக்கம் அடைந்தார். இந்த சம்பவத்தை அடுத்து, அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவலை கொடுக்க இதுகுறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது கிடைத்த தகவலின்படி, அந்த பெண் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

பெண் தற்கொலை செய்துகொள்ளும் அதிர்ச்சியான அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

(குறிப்பு ) வீடியோ உங்கள் மனநிலையை கலைக்கும் வகையில் இருப்பதால் உங்கள் மனநிலைக்கு ஏற்றபடி பார்த்துக்கொள்ளுங்கள். 

Published by
பால முருகன்

Recent Posts

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

21 minutes ago

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

24 minutes ago

IND Vs PAK.. போர் பதற்றம்.., ஐபிஎல் தொடர் கைவிடப்படுகிறதா..? பிசிசிஐ விளக்கம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…

1 hour ago

சென்னையில் போர் பாதுகாப்பு ஒத்திகை.! ‘அச்சம் வேண்டாம்’ – பேரிடர் மேலாண்மை ஆணையம்.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர்: வீர உரையாற்றிய இந்த சிங்கப்பெண்கள் யார்.? சிலிர்க்கும் பின்னணி..!!

டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர் என்றால் என்ன? நள்ளிரவு பயங்கரவாதிகளின் தூக்கம் துளைத்த தரமான சம்பவம்.!

காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…

3 hours ago