இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

சிறுவர்கள் சண்டையிடுவதை உடனே நிறுத்த முடியாது எனவும் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

israel vs iran donald trump

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள் மோதிக்கொண்டது இது உலகம் முழுவதும் பெரும் கவலையை ஏற்படுத்தியது. இந்த மோதலில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா சேர்ந்து ஈரானின் மூன்று அணு ஆயுதத் தளங்களை (ஃபோர்டோ, நடான்ஸ், எஸ்ஃபஹான்) குண்டுவீசி தாக்கின. டிரம்ப், இந்தத் தாக்குதல் ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை அழித்துவிட்டதாகக் கூறினார், ஆனால் அமெரிக்க உளவுத்துறை, அந்தத் தளங்கள் முழுமையாக அழியவில்லை, சில மாதங்களுக்கு மட்டுமே தாமதமாகியிருக்கலாம் என்று தெரிவித்தது.

இதற்கு பதிலாக, ஈரான் கத்தாரில் உள்ள ஒரு அமெரிக்க விமானத் தளத்தைத் தாக்கியது, ஆனால் அது ஏற்கனவே காலி செய்யப்பட்டிருந்ததால் பெரிய பாதிப்பு இல்லை. இந்த மோதல் முடிவுக்கு வர, டிரம்ப் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதாகக் கூறினார். ஆனால், தொடக்கத்தில் இஸ்ரேலும் ஈரானும் ஒருவரையொருவர் மீறல் செய்ததாக குற்றம்சாட்டினர்.

இதனைத்தொடர்ந்து, இஸ்ரேல் அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், “ஈரான் ஒப்பந்தத்தை மதித்தால் நாங்களும் மதிப்போம்” என்றார். ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸ்ஸேகியனும், “இஸ்ரேல் மீறாவிட்டால் நாங்கள் ஒப்பந்தத்தைப் பின்பற்றுவோம்” என்று உறுதியளித்தார். இதனால், இஸ்ரேல் விமான நிலையமும், ஈரானின் வான்பரப்பும் மீண்டும் திறக்கப்பட்டு, பதற்றம் தற்போது குறைந்துள்ளது.

இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடந்த மோதலைப் பற்றி பேசும்போது, அதை “பள்ளிக்கூட சிறுவர்களின் சண்டை” என்று நகைச்சுவையாக கூறியுள்ளார். ஜூன் 24, 2025 அன்று நெதர்லாந்தில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டுக்கு செல்லும் வழியில், தனது Truth Social தளத்தில் இதைப் பதிவிட்டார். “இஸ்ரேலும் ஈரானும் பள்ளிக்கூட சிறுவர்களைப் போல் சண்டையிட்டனர். அவர்களை கட்டுப்படுத்த கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினேன்” என தெரிவித்தார்.

நேட்டோ உச்சி மாநாட்டுக்குப் பிறகு பேசிய அவர் ” இஸ்ரேலும் ஈரானும் பள்ளிக்கூட சிறுவர்களைப் போல் சண்டையிட்டுக் கொண்டனர். அவர்களை கட்டுப்படுத்த ஒரு வலுவான மொழியைப் பயன்படுத்தினேன். போரின் போது இரு நாடுகளும் மிக மோசமாக சண்டையிட்டுக் கொண்டனர், அவர்களை தடுக்க முடியாது. சிறுவர்கள் சண்டையிடுவதை உடனே நிறுத்த முடியாது, 2-3 நிமிடங்கள் போகவிட்டு, பிறகு சண்டையை நிறுத்துவது எளிது. அதைத்தான் நான் செய்தேன்” எனவும் கூறியுள்ளார்.

மேலும், இஸ்ரேல் vs ஈரானில் இப்போதைக்கு, போர் நிறுத்தம் நீடித்து வருகிறது, ஆனால் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான பகை முற்றிலும் முடியவில்லை. டிரம்பின் முயற்சி இந்த மோதலை தற்காலிகமாக நிறுத்தியிருந்தாலும், இந்த அமைதி நீண்டகாலம் நீடிக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. அடுத்தடுத்து என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் பதற்றம் முழுவதும் குறையாமல் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்