கெஜ்ரிவால் வீட்டில் நடந்தது என்ன.? ஆம் ஆத்மி விளக்கமும்.. ஸ்வாதி மாலிவால் பதிலும்…

Published by
மணிகண்டன்

சென்னை: ஸ்வாதி மாலிவால் விவகாரம் பாஜகவின் சதி என ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது.

கடந்த மே 13ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்ற ஆம் ஆத்மி எம்.பி ஸ்வாதி மாலிவால், கெஜ்ரிவால் உதவியாளரால் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக டெல்லி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் (வியாழன்) வழக்கு பதியப்பட்டது. ஸ்வாதி மாலிவால், டெல்லி காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு தொடர்பாக நேற்று மாஜிஸ்ரேட் முன் ஆஜராகி சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக நேற்று ஆம் ஆத்மி கட்சி சார்பாக டெல்லி மாநில அமைச்சர் அதிஷி விளக்கம் அளித்தார்.  அதில், ஸ்வாதி மாலிவால் சம்பவத்திற்கு பின், பாஜக சதி செய்து வருகிறது. திட்டமிட்டு ஸ்வாதியை கெஜ்ரிவால் வீட்டிற்கு அனுப்பியுள்ளது. கெஜ்ரிவால் மீது பொய் வழக்கு பதியவைப்பதே இந்த சதியின் நோக்கம். சதியின் முகமாக ஸ்வாதி இருக்கிறார். முதல்வர் மீது குற்றச்சாட்டை சுமத்துவதே அவரது நோக்கம்.

அந்த புகாரில் ஸ்வாதி. கொடூரமாக தாக்கபட்டதாக கூறுகிறார். அதிகம் காயமடைந்ததாகவும், பிறகு வலியால் துடித்ததாகவும், உடைகள் கிழிந்ததாகவும் கூறுகிறார். ஆனால், வெளியான வீடியோவில் அவர்தான் காவலாளியை மிரட்டுவது போல் இருக்கிறது. ஸ்வாதியின் குற்றச்சாட்டு தவறானவை. தாக்குதல் பற்றிய பேச்சு உண்மை இல்லை என்று அதிஷி விளக்கம் அளித்தார்.

இது குறித்து டிவிட்டரில் பதிவு செய்த ஸ்வாதி மாலிவால், நேற்று முன்தினம் கூட நான் கூறிய அனைத்து உண்மைகளும் முழுதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் பழைய கதைக்கே கட்சி திரும்பி உள்ளது. சில குண்டர்கள்தான் ஆம் ஆத்மி கட்சியை அச்சுறுத்தி வருகின்றனர். ஒருவேளை நான் கைது செய்யப்பட்டால், அனைத்து ரகசியங்களையும் வெளியிடுவேன். நாட்டில் உள்ள பெண்களுக்காக நான் தனியாக போராடி வருகிறேன். எனக்காகவும் போராடுவேன். நேரம் வரும்போது முழு உண்மையும் வெளியே வரும் அதிஷி கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

15 minutes ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

46 minutes ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

48 minutes ago

”ஈரான் ஒருபோதும் சரணடையாது”- அமெரிக்க அதிபருக்கு ஈரான் தலைவர் கடும் எச்சரிக்கை.!

இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…

2 hours ago

சாகித்ய அகாடமி விருதுகள்: விஷ்ணுபுரம் சரவணனுக்கு சாகித்ய பால புரஸ்கர் விருது அறிவிப்பு.!

டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…

2 hours ago

இறுதி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு.., சென்னை ஏர் இந்தியா விமானங்கள் அடுத்தடுத்த ரத்து.!

சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது.  அதன்படி, இரவு…

2 hours ago