Categories: இந்தியா

மக்களவை இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி!

Published by
பாலா கலியமூர்த்தி

ஜலந்தர் மக்களவை இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சுஷில் குமார் ரிங்கு வெற்றி பெற்றார்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நாடாளுமன்ற மக்களவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் சுஷில் குமார் ரிங்கு வெற்றி பெற்றுள்ளார். ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் சுஷில் ரிங்கு, காங்கிரஸ் வேட்பாளருமான கரம்ஜித் கவுர் சவுத்ரியை 58,691 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இடைத்தேர்தலில் சுஷில் குமார் ரிங்கு 3,02,279 வாக்குகளும், சவுத்ரி 2,43,588 வாக்குகளும் பெற்றதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடந்த பாரத் ஜோடோ யாத்ராவில் காங்கிரஸ் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரி இறந்ததை அடுத்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

மே 10-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. காங்கிரஸ் சார்பில் சவுத்ரியின் மனைவி கரம்ஜித் கவுரும், பாஜக வேட்பாளராக இந்தர் இக்பால் அத்வால் போட்டியிட்டனர்.

SAD-BSP பங்கா எம்எல்ஏ டாக்டர் சுக்விந்தர் குமார் சுகியை வேட்பாளராக நிறுத்தியது. இந்த நிலையில், ஜலந்தர் மக்களவை இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சுஷில் குமார் ரிங்கு வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டார். காங்கிரஸ் 2வது இடமும், சிரோன்மனி அகாலிதள வேட்பாளர் 3வது இடமும் பிடித்தனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசனம் செய்த பிரதமர் மோடி.!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோயிலில்…

36 minutes ago

வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 27) கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார்.  இந்த…

1 hour ago

மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

சேலம் : மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றின் கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய…

1 hour ago

கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!

அரியலூர் : திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. அரியலூர் மாவட்டத்தில்…

2 hours ago

நான் முதலமைச்சர் பதவிக்கு தகுதி இல்லாதவனா? – திருமாவளவன் கேள்வி.!

இராணிப்பேட்டை : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "முதலமைச்சர் ஆகும் தகுதி எனக்கு இல்லையா?" என்று கேள்வி எழுப்பியது,…

2 hours ago

பிரதமர் மோடியே வரவேற்று 3 கோரிக்கைகளுடன் மனு அளித்த எடப்பாடி பழனிசாமி.!

திருச்சி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, நேற்று (ஜூலை 26) மாலை 7:50 மணிக்கு தனி…

3 hours ago