அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 3.65 கோடி வேலைகள் உருவாக்கப்படும் அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட வீடுகளை நிர்மாணிப்பதில் சுமார் 3.65 கோடி வேலைகள் உருவாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நேற்று தெரிவித்தார்.
இந்திய தொழில்துறை ஆலோசனை கூட்டத்தில் காணொளி மூலம் பேசிய ஹர்தீப் சிங் பூரி, இதுவரை 1.65 கோடி வேலைகள் ஏற்கனவே PMAY – ன் கீழ் உருவாக்கப்பட்டுள்ளன.
1.12 கோடி கோரிக்கைக்கு எதிராக அமைச்சகம் 1.07 கோடி வீடுகளுக்கு அனுமதி அளித்துள்ளதாகவும் இவற்றில் 67 லட்சம் வீடுகள் கட்டுமானத்திற்காக களமிறக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை 35 லட்சம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், அனுமதிக்கப்பட்ட அனைத்து வீடுகளையும் நிர்மாணிப்பதில் 3.65 கோடி வேலைகள் உருவாக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் இதுவரை 1.65 கோடி வேலைகள் PMAY – ன் கீழ் அமைக்கப்பட்ட வீடுகளை நிர்மாணிப்பதில் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் என்று அவர் கூறினார்.
தற்போது, 18 நகரங்களில் சுமார் 700 கிலோமீட்டர் மெட்ரோ நெட்வொர்க் நீளம் செயல்பட்டு வருவதாகவும் 27 நகரங்களில் சுமார் 900 கிமீ நெட்வொர்க் கட்டுமானத்தில் உள்ளது என்றும் அவர் கூறினார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…