அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 3.65 கோடி வேலைகள் உருவாக்கப்படும் அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட வீடுகளை நிர்மாணிப்பதில் சுமார் 3.65 கோடி வேலைகள் உருவாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நேற்று தெரிவித்தார்.
இந்திய தொழில்துறை ஆலோசனை கூட்டத்தில் காணொளி மூலம் பேசிய ஹர்தீப் சிங் பூரி, இதுவரை 1.65 கோடி வேலைகள் ஏற்கனவே PMAY – ன் கீழ் உருவாக்கப்பட்டுள்ளன.
1.12 கோடி கோரிக்கைக்கு எதிராக அமைச்சகம் 1.07 கோடி வீடுகளுக்கு அனுமதி அளித்துள்ளதாகவும் இவற்றில் 67 லட்சம் வீடுகள் கட்டுமானத்திற்காக களமிறக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை 35 லட்சம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், அனுமதிக்கப்பட்ட அனைத்து வீடுகளையும் நிர்மாணிப்பதில் 3.65 கோடி வேலைகள் உருவாக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் இதுவரை 1.65 கோடி வேலைகள் PMAY – ன் கீழ் அமைக்கப்பட்ட வீடுகளை நிர்மாணிப்பதில் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் என்று அவர் கூறினார்.
தற்போது, 18 நகரங்களில் சுமார் 700 கிலோமீட்டர் மெட்ரோ நெட்வொர்க் நீளம் செயல்பட்டு வருவதாகவும் 27 நகரங்களில் சுமார் 900 கிமீ நெட்வொர்க் கட்டுமானத்தில் உள்ளது என்றும் அவர் கூறினார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…