கோர விபத்து.! நேபாளத்தில் பேருந்து பள்ளத்தில் விழுந்து 14 பேர் உயிரிழப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • நேபாளத்தில் சிந்துபால்சாக் பகுதியில் உள்ள அரணிகோ மலைப்பகுதிச் சாலையில் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியானார்கள், 18 பேர் காயமடைந்தனர்.
  • அதிகமான வேகம், முரட்டுத்தனமாக வாகனத்தை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர்.

நேபாளத்தி டோலகா மாவட்டம் காளின்சோக் நகரில் உள்ள பகவதி அம்மன் கோயிலுக்கு பேருந்தில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு, பக்தபூர் நகருக்கு நேற்று இரவு திரும்பினர். பின்னர் சிந்துபால்சாக் பகுதியில் அரணிகோ நெடுஞ்சாலையில் பேருந்து வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 100மீட்டர் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது. விபத்து நடந்த இடம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 80கி.மீ. தொலைவில் இருக்கிறது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 3 குழந்தைகள் உள்ளிட்ட 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள் என்று போலீஸார் காத்மாண்டு போஸ்ட் செய்திக்குப் பேட்டி அளித்துள்ளார்கள். இந்த விபத்துக் குறித்து அறிந்தவர்கள், போலீஸாருக்கும், மீட்புப்படையினருக்கும், மருத்துவமனைக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். மிகவும் ஆபத்தான நிலையில், 18 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

போலீஸ் ஆய்வாளர் நவராஜ் நிபானே கூறுகையில், 18 பேரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இதில் 3 பேர் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. பலியானவர்கள் விவரம், அடையாளம் குறித்து விசாரித்து வருகிறோம். இந்த விபத்து நடக்கும் போது பேருந்தில் இருந்து குதித்துத் தப்பிய ஓட்டுநரைத் தேடி வருகிறோம். அதிகமான வேகம், முரட்டுத்தனமாக வாகனத்தை ஓட்டியதே விபத்துக்கு காரணமாக இருக்கும் என்று தெரிகிறது, என குறிப்பிட்டார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

1 minute ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

20 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

43 minutes ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

57 minutes ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

15 hours ago