அக்டோபரில் ரூ.1,30,127 கோடி மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூலானதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அக்டோபரில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.1,30,127 ஆக உயர்ந்துள்ளதாகவும்,அக்டோபர் 2021 இன் வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாயை விட 24% மற்றும் 2019-2020 உடன் ஒப்பிடுகையில் 36% அதிகம் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சகத்தின் தரவுகளின்படி,அக்டோபர் 2021 இல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,30,127 கோடியாகும், இதில் சிஜிஎஸ்டி ரூ.23,861 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ.30,421 கோடி, ஐஜிஎஸ்டி ரூ.67,361 கோடி (ரூ. 32,998 கோடி மற்றும் சரக்குகளின் இறக்குமதி மூலம் வசூலிக்கப்பட்டது) ரூ.8,484 கோடி (பொருட்களின் இறக்குமதி மூலம் வசூலான ரூ. 699 கோடி உட்பட) ஆகியவை அடங்கும்.
இரண்டாவது அலைக்கு முன்னதாக இந்த ஆண்டு ஏப்ரலில் இதுவரை இல்லாத அதிகபட்ச ஜிஎஸ்டி வசூலான ரூ.1,41,384 கோடியும் பதிவாகியுள்ளது.இந்த நிலையில்,அக்டோபரில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.3 லட்சம் கோடியாக உயர்ந்தது, ஜூலை 2017 இல் ஜிஎஸ்டி வரி தொடங்கப்பட்டதிலிருந்து இரண்டாவது அதிகபட்ச உயர்வாகும்.இது கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலைக்குப் பிறகு வணிக நடவடிக்கைகளின் வலுவான முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
இது பொருளாதார மீட்சிக்கான போக்குடன் மிகவும் ஒத்துப்போகிறது. இரண்டாவது அலையிலிருந்து ஒவ்வொரு மாதமும் உருவாக்கப்பட்ட இ-வே பில்களின் போக்கிலிருந்தும் இது தெளிவாகிறது. செமிகண்டக்டர்கள் விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறு காரணமாக கார்கள் மற்றும் பிற பொருட்களின் விற்பனை பாதிக்கப்படாமல் இருந்திருந்தால் வருவாய் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.
எனினும்,மாநில மற்றும் மத்திய வரி நிர்வாகத்தின் முயற்சிகள் காரணமாக வருவாய்கள் உயர உதவி செய்யப்பட்டுள்ளன, இதன் விளைவாக முந்தைய மாதங்களை விட வருவாய் அதிகரித்துள்ளது. தனிப்பட்ட வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு கூடுதலாக, ஜிஎஸ்டி கவுன்சில் பின்பற்றும் பல்முனை அணுகுமுறையின் விளைவாக இது உள்ளது”, என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 17 அன்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சிலின் 45 வது கூட்டத்தில், மறைமுக வரி விவகாரங்களில் முடிவெடுக்கும் உயர்மட்டக் குழு, வரி விகிதங்களை ஆராய்வது குறித்து முக்கிய முடிவுகளை எடுத்தது, மேலும் ஜனவரி 1, 2022 முதல் ஜவுளி மற்றும் காலணித் துறைகளில் (textile and footwear sectors) வரி மாற்றங்களைச் சரிசெய்ய முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…