நீங்கள் வாரிசு அரசியலின் மோசமான தயாரிப்பு… மராட்டிய முதல்வரை தாக்கிய கங்கனா…

Published by
Kaliraj

நீங்கள் வாரிசு அரசியலின் மோசமான தயாரிப்பு என்று மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரேவை நடிகை கங்கனா ரனவத் தாக்கி டிவிட்டரில்  பதிவிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு விசாரணை தொடர்பாக மும்பை காவல்துறையையும், மராட்டிய  மாநில அரசையும் நடிகை கங்கனா ரனவத் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த விவகாரம் குறித்து நேற்று முன்தினம் நடந்த சிவசேனா கட்சியின் தசரா பொதுக்கூட்டத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே கங்கனா ரணாவத்தை மறைமுகமாக தாக்கி பேசினார். அவர் பேசும்போது, ‘தங்களது வீட்டில் வாழ்வாதாரம் இல்லாமல் மும்பை வந்தவர்கள், வாழ்க்கை கொடுத்த மாநிலத்துக்கு துரோகம் செய்கின்றனர்’ என கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்து நடிகை கங்கனா ரனவத், தனது டிவிட்டர் பதிவில்,  உங்கள் மகன் வயதில் உள்ள பெண் மீதான கோபத்தால், முதல்வராக நீங்கள் ஒட்டு மொத்த மாநிலத்தின் மாியாதையையும் குறைக்க வைத்திருக்கிறீர்கள். உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன். சுயமாக முன்னேறிய ஒரு பெண் குறித்து இப்படித்தான் பேசுவீர்களா? நீங்கள் வாரிசு அரசியலின் மோசமான தயாரிப்பு. உங்களை பற்றி நீங்கள் வெட்கப்பட வேண்டும். ஒரு பொது ஊழியராக இருக்கும் நீங்கள் இதுபோன்ற சிறு சண்டைகளில் ஈடுபடுகிறீர்கள். உங்கள் சொந்த பலத்தை அவமதிக்கிறீர்கள். உங்களுடன் உடன்படாத மக்களுக்கு தொந்தரவு கொடுக்கின்றீர்கள். மன உளைச்சலை ஏற்படுத்துகிறீர்கள். நீங்கள் செய்வது அழுக்கு அரசியல்என்றும்,  இது அவமானம் என்றும் தனது டுவிட்டர் பதிவில்  தெரிவித்துள்ளார்.

Recent Posts

”பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மனதை நொறுக்கியது” – ராகுல் காந்தி இரங்கல்.!

”பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மனதை நொறுக்கியது” – ராகுல் காந்தி இரங்கல்.!

கர்நாடகா : பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு…

9 hours ago

பெங்களூரு உயிரிழப்பு: ரூ.10 லட்சம் நிவாரணம் – முதல்வர் சித்தராமையா அறிவிப்பு.!

பெங்களூர் :  பெங்களூருவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர், 50-க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதற்கு அரசின்…

9 hours ago

”பெங்களூருவில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது” – பிரதமர் மோடி இரங்கல்.!

பெங்களூர் : 18 வருட காத்திருப்புக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக ஐபிஎல் பட்டத்தை வென்றது.…

9 hours ago

”பெங்களூரு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்.!

பெங்களூரு : 2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் இறுதி போட்டியான நேற்று பஞ்சாப் அணியை வென்று ஆர்சிபி முதல்முறையாக ஐபிஎல்…

10 hours ago

ஆர்சிபி வெற்றி விழாவில் சோகம்.., மெட்ரோ நிலையங்கள் மூடல்.!

பெங்களூரு : 18 ஆண்டு தவத்திற்கு பின், ஐபிஎல் தொடரில், ஆர்சிபி முதல்முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது. இதனால்,…

10 hours ago

ஆர்சிபி கொண்டாட்டத்தில் சோகம்.., பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு.!

பெங்களூரு : 2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில், நேற்றைய தினம் நடந்த இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வென்று ஆர்சிபி முதல்முறையாக…

12 hours ago