‘135 நாட்களுக்கு’ பிறகு ஸ்ரீநகரில் புகழ்பெற்ற ஜூம்மா மசூதி திறப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் ரத்து செய்யப்பட்டது.
  • ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற ஜூம்மா மசூதி 135 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் திறக்கப்பட்டு தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது அசம்பவித ஏதும் நடைபெறாமல் இருக்க காஷ்மீர் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பின்னர் காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரிகள் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் வீடுகள் காவலில் வைக்கப்பட்டனர். தொலைபேசி, இணையதளம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் துண்டிக்கப்பட்டு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில், குறிப்பாக சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட முதல் ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற ஜூம்மா மசூதியில் தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டு மசூதியின் கதவுகள் மூடப்பட்டன. மேலும், பிரிவினைவாத தலைவர்கள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால் போராட்டங்கள் நடைபெறாமல் இருக்க மசூதியை சுற்றியுள்ள பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். இதற்கிடையில், காஷ்மீரில் தற்போது நிலைமை சீரடைந்து வருவதையடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பல்வேறு மசூதிகளில் தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது மூடப்பட்ட ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற ஜூம்மா மசூதி 135 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. பின்னர் மசூதியில்நேற்று மதிய நேர தொழுகை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமிய மக்கள் ஜூம்மா மசூதியில் 135 நாட்களுக்கு பிறகு தொழுகையில் ஈடுபட்டனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

12 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

13 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

13 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

14 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

15 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago