முக்கியச் செய்திகள்

பீகாரை பின்பற்றும் ஆந்திரா… சாதிவாரி கணக்கெடுப்பு விறுவிறு தொடக்கம்..!

Published by
மணிகண்டன்

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது தற்போது இந்திய அரசியலில் முக்கிய பங்காற்றி வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம் என காங்கிரஸ் கட்சி தங்கள் தேர்தல் முக்கிய பிரச்சாரமாக முன்வைத்து வருகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி கருத்து ஏதும் கூறாமல் இருந்து வருகிறது.

ஏற்கனவே பீகார் முதல்வர் நிதீஷ்குமார் அம்மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டார். அதனை சட்டப்பேரவையில் அண்மையில் வெளியிட்டும் விட்டார். இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான நலத்திட்டங்களை விரிவுபடுத்த முடியும் என்றும் அவர்கள் தரப்பு கருத்தாக இருக்கிறது. தற்போது ஆந்திரா அரசும் சாதிவாரி கணக்கெடுப்பை முன்னிலைப்படுத்தி வருகிறது.

சந்திரபாபு நாயுடுக்கு ஜாமீன் வழங்கி ஆந்திரா ஐகோர்ட் உத்தரவு!

முன்னதாக கடந்த 15ஆம் தேதி இரண்டு நாள் சோதனையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று முதல் முழு வீச்சில் சாதிவாரி கணக்கெடுப்பு ஆந்திர மாநிலம் முழுவதும் துவங்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சீனிவாச வேணுகோபால் கிருஷ்ணன் கூறுகையில், ஆந்திராவில் 139 பிற்படுத்தப்பட்ட பிரிவினர் உள்ளனர். அவர்களின் திட்டங்களை மேம்படுத்தும் வகையில் இந்த சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது என்று கூறியுள்ளார். ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பொறுப்பில் உள்ளார்.

பீகாரில் அரசு வருவாய் துறை அதிகாரிகளின் தலைமையின் கீழ் இந்த சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு என்பது, தன்னார்வலர்கள் மற்றும் கிராம ஊழியர்கள் கொண்டு நடத்தப்படுகிறது. இதனால் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய உண்மையான நிலவரங்கள் தெரிய வருமா என்பது அரசியல் பேசுபொருளாக உள்ளது.

இந்தியாவில் 1935க்கு பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு என்பது நடத்தப்படவில்லை. அதன் பிறகு ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒரு முறையும் மக்கள் தொகை கணக்கெடுப்போடு SC/ST பிரிவினருக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டும் நடைபெற்று வந்தது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“நீ சிங்கம் தான்” விராட் கோலிக்கு STR-ன் ‘அன்பு’ பதிவு!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…

40 minutes ago

பிரதமர் மோடி போராளி…பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பார்” நடிகர் ரஜினிகாந்த்!

மும்பை :  கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய…

47 minutes ago

பஹல்காம் தாக்குதல் தொடர்பான பொதுநல மனு! உச்சநீதிமன்றம் காட்டம்!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்…

1 hour ago

ப்ளீஸ் பாலோவ் பண்ணாதீங்க…விஜய் வைத்த வேண்டுகோளை மீறும் த.வெ.க தொண்டர்கள்!

மதுரை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ‘ ஜனநாயகன்’ பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…

1 hour ago

முக்கியமான நேரத்தில் பஞ்சாப்புக்கு பெரிய அடி? ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய க்ளென் மேக்ஸ்வெல்!

பஞ்சாப் :  ஐபிஎல் போட்டிகளில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கிரிக்கெட் வீரர்களில் க்ளென் மேக்ஸ்வெல்லும் ஒருவர். நடப்பாண்டு ஐபிஎல்…

2 hours ago

கம்பேக் கொடுத்தாரா சூர்யா? ரெட்ரோ படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, படத்தை சூர்யா…

2 hours ago