பாட்னாவை அடுத்து காங்கிரஸ் தலைமையில் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம்.! தேதிகள் அறிவிப்பு .!

Published by
மணிகண்டன்

பாட்னாவை அடுத்து ஜூலை 17, 18இல் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் காங்கிரஸ் தலைமையில் நடைபெற உள்ளது. 

கடந்த மாதம் 23ஆம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. பீகார் முதல்வரும், ஜனதாதளம் கட்சி தலைவருமான நிதிஷ்குமார் அழைப்பின் பெயரின் கூட்டப்பட்ட இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, என பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.

இதனை அடுத்து 2வது கூட்டம் காங்கிரஸ் தலைமையில் இமாச்சல பிரதேசம், சிம்லாவில் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில், தற்போது இடம் தேதி மாற்றப்பட்டு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கே.சி.வேணுகோபால் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், ஜூலை 17, 18 இல் பெங்களூருவில் எதிர்க்கட்சி கூட்டம் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கர்நாடகாவுக்கும், தமிழக அரசுக்கும் மேகதாது அணை விவகாரத்தில் உரசல் நிலவி வருவதால், பெங்களூருவில் நடைபெறும் கூட்டம் மாற்றப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் பெங்களூருவில் கூட்டம் நடைபெறும் என உறுதிப்படுத்தப்பட்டதால் திமுக அதில் பங்கேற்குமா, என்பது குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

நடிகை சரோஜா தேவி மறைவு : நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!

சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…

15 minutes ago

FIFA கிளப் உலகக் கோப்பை 2025: சாம்பியன் பட்டத்தை வென்ற செல்சியா எஃப்சி!

பாரிஸ்  : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…

59 minutes ago

நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!

சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…

1 hour ago

“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!

டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…

3 hours ago

தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!

டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…

3 hours ago

உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…

4 hours ago