Congress [Image source : Twitter/@kcvenugopalmp]
பாட்னாவை அடுத்து ஜூலை 17, 18இல் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் காங்கிரஸ் தலைமையில் நடைபெற உள்ளது.
கடந்த மாதம் 23ஆம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. பீகார் முதல்வரும், ஜனதாதளம் கட்சி தலைவருமான நிதிஷ்குமார் அழைப்பின் பெயரின் கூட்டப்பட்ட இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, என பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.
இதனை அடுத்து 2வது கூட்டம் காங்கிரஸ் தலைமையில் இமாச்சல பிரதேசம், சிம்லாவில் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில், தற்போது இடம் தேதி மாற்றப்பட்டு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கே.சி.வேணுகோபால் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், ஜூலை 17, 18 இல் பெங்களூருவில் எதிர்க்கட்சி கூட்டம் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கர்நாடகாவுக்கும், தமிழக அரசுக்கும் மேகதாது அணை விவகாரத்தில் உரசல் நிலவி வருவதால், பெங்களூருவில் நடைபெறும் கூட்டம் மாற்றப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் பெங்களூருவில் கூட்டம் நடைபெறும் என உறுதிப்படுத்தப்பட்டதால் திமுக அதில் பங்கேற்குமா, என்பது குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…