கல்விக்கு வயது தடையில்லை – மகனுடன் இணைந்து பிளஸ் டூ தேர்வு எழுதிய பெற்றோர்.!

Published by
Ragi

படிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் மகனுடன் இணைந்து பிளஸ் டூ தேர்வு எழுதி பெற்றோர் தேர்ச்சி பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் மலப்புரத்தை சேர்ந்த தொழிலதிபரான முஸ்தபாவிற்கு நுசைபாவை திருமணம் செய்து வைத்தனர். அப்போது நுசைபா பிளஸ் டூ படித்து வந்தார். திருமணம் ஆனதால் படிக்க இயலாமல் போனதால் கவலையில் இருந்து வந்தாராம். இந்த வயதிலும் படிக்க ஆசைப்படும் மனைவியின் ஆர்வத்தை கண்டு 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்த முஸ்தபாவிற்கும் படிக்கும் ஆசை தொற்றி விட்டதை அடுத்து, பிளஸ் டூ தேர்வு எழுத முடிவு செய்துள்ளனர்.

அதற்காக பயிற்சி மையங்களை அணுகியதாகவும், ஆனால் அவை யாவும் கைக் கொடுக்கவில்லையாம். அப்போது தான் அவர்களின் ஊரின் பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்திருந்த அறிவிப்பு பலகையில் கேரளா எழுத்தறிவு மையத்தின் சமநிலை தேர்வு குறித்து அறிந்து கொண்டனர். அதனையடுத்து அந்த தம்பதி அவரது பிளஸ் டூ படிக்கும் மகனுடன் தேர்வு எழுதி தற்போது தேர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து முஸ்தபா கூறுகையில், ஆரம்பத்தில் கொஞ்சம் கூச்சப்பட்டோம். ஏனெனில் இந்த வயசில் படிக்கிறோமே என்று தயக்கம் இருந்தது. ஆனால் தேர்ச்சி பெற்று பலரின் பாராட்டுகளை பார்த்த பின் இனி வெட்கப்பட கூடாது என்று முடிவு செய்ததாகவும், பட்டப்படிப்பு படிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். கல்விக்கு வயது தடையில்லை என்பதற்கிணங்க மகனுடன் இணைந்து பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற இந்த தம்பதியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Published by
Ragi

Recent Posts

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

7 hours ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

8 hours ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

9 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

9 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

10 hours ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

11 hours ago